tamilnadu

img

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் வீழ்ச்சியடைந்த ஆயத்த ஆடை உற்பத்தி

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி-யால் ஆயத்த ஆடைகள் உற்பத்தி கடும் நெருக் கடியில் சிக்கியுள்ளது. குறிப்பாக பெண்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது என தமிழ் நாடு ஆயத்த ஆடை கள் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஏ. அப்துல் ரஹீம் சேட் கூறியுள்ளார். தீக்கதிருக்கு அவர் அளித்த பேட்டி:- மத்திய அரசின் பணமதிப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றிலிருந்து ஆயத்த ஆடைகள் தொழில் இன்னும் மீள வில்லை. தீபாவளிப் பண்டி கைக்கு ஒரு வாரமே உள்ள நிலை யில் அன்றாடம் நடக்கும் பணிகள் தான் நடைபெறுகிறது. பண்டிகை யையொட்டி அதிக உற்பத்தி இல்லை. பெண்கள் அணியும் நைட்டி, பாவாடைகள் உற்பத்தி மதுரை, புதியமுத்தூர், தள வாய்புரம் ஆகிய ஊர்களிலும் ஆண்கள் ஆயத்த ஆடைகள் நத்தம், புத்தாநத்தம், கம்பம் ஆகிய ஊர்களிலும் அதிகளவில் உற் பத்தி செய்யப்படும். இங்கெல் லாம் உற்பத்தி பெருமளவு குறைந்து விட்டது.  மதுரையில் மட்டும் 400 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இருந்தன. இவை கடந்த மூன்றாண் டுகளில் 100- ஆக குறைந்துவிட்டன. கடந்த ஆண்டுகளில் தீபாவளி யையொட்டி ஆயத்த ஆடைகள் விற்பனை ரூ.40 கோடிவரை இருந்தது. கடந்த இரண்டாண்டில் விற்பனை கணிசமாகக் குறைந்து விட்டது.  பொருளாதார வளர்ச்சியில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி பெரும் பங்கு வகித்த நிலையில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களைப் போல் மதுரை மிகப் பெரும் சரிவை சந்தித்துள் ளது. திருப்பூரிலுள்ள ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களில் முன்பு வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகள் தொங்கிக் கொண்டிருக்கும். இப்போது அவை அங்கு தொங்குவதில்லை. திருப்பூர் மாவட்டத்தின் நிலையே இப்படியென்றால் மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களின் நிலை எப்படி யிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவரை இழந்த வர்கள், தங்கள் திருமணத்திற்கென சுயமாக வேலை பார்த்து சம்பா திக்கும் பெண்கள் ஆகியோர் அதிக ளவில் ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. ஆயத்த ஆடை உற்பத்தியில் ஏற் பட்டுள்ள சரிவு பெண்களின் வேலை வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகிறது. தீபாவளியென்றால் இரவு, பகலாக வேலை நடைபெறும். அந்தத் தொழிலாளர்களுக்கு 40 சத வீதம் வரை போனஸ் வழங்கப் படும், தொழில் நெருக்கடியால் போனசும் வழங்கமுடியவில்லை. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நெருக் கடியால் வேலை குறைந்து தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கிறார்கள்.  ஒரு சிறிய ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் குறைந்தது 25 பேர் பணியாற்றி வந்தார்கள். இன்றைக்கு 15 பேர் மட்டுமே பணி யாற்றுகிறார்கள். பத்து பேர் வேலை யிழந்துள்ளனர். சிறிய ஊர்களில் கூட பெரிய துணிக்கடை நிறு வனங்கள் வடமாநிலங்களில் உற்பத்தியாகும் ஆடைகளை விற்பனை செய்கின்றன. இதுவும் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளின் விற்பனை சரிவிற்கு ஒரு காரணம்.  ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிலைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் நூல் உற்பத்தி மீதான வரியைக் குறைக்க வேண் டும். ஆயத்த ஆடைகள் உற்பத் திக்கு சலுகைகள் வழங்க வேண்டு மென தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் சிறு உற்பத்தியாளர்கள் மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர் என்றார். ஜெ.பொன்மாறன்