tamilnadu

img

மக்களை ஏற்றத் தாழ்வுடன் நடத்துகிற கருத்தியலுக்கு எதிராக சனாதன ஒழிப்பு மாநாடு

சென்னை, செப். 1 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று (செப்.2) சென்னை காமராஜர் அரங்கில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெறு கிறது. இதுதொடர்பாக வெள்ளியன்று (செப்.1) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா கூறியதாவது: சனாதனம் என்றால் வர்ணா சிரமம், மநு தர்மம் என்று பொருள். அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரா னது. சனாதனத்தை இந்தியாவில் மீண்டும் கொண்டு வர ஆளுநர், ஒன்றிய அரசின் அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். இது ஏற்கத்தக் கதல்ல. உழைக்கும் மக்களையும், பெண்களையும் சமமாக பார்க்காத, மூட நம்பிக்கைகளை பரப்புகிற சனா தன கருத்து மக்கள் மனங்களில் புகுத் தப்பட்டுள்ளது. இந்த கருத்தை நீக்கு வதற்காக ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெறுகிறது. சனாதன கருத்து எத்தகைய கொடூரமானது என்பதை தினமலர் நாளேட்டின் செய்தி வெளிப்படுத்தி யது. குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை வக்கிரமாக பார்ப்பது தான் சனாதன கருத்து. சாதியமும், பெண்ணடிமைத்தனமும்தான் சனா தனத்தின் ஆதாரமாக உள்ளது. சாதிய பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் சட்டம் கொண்டு  வரப்பட்டுள்ளது. இது இந்தியா விற்கு ஏற்பட்டுள்ள அவமானம். இந்த மாநாட்டில், அம்பேத் கரிய, பெரியாரிய, மார்க்சிய இயக்க ங்களில் உள்ளவர்கள் பங்கேற்கின் றனர். சனாதனத்திற்கும் ஆன்மீகத் திற்கும் தொடர்பில்லை. அதை நிரூ பிக்க ஆன்மீகவாதிகளும் பங்கேற் கின்றனர். இது குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரான மாநாடு அல்ல. மக்களை ஏற்றத் தாழ்வுடன் நடத்து கிற, ஜனநாயக, கருத்து சுதந்திரத்தை  பறிக்கும் கருத்தியலுக்கு எதிரான மாநாடு.

மனிதர்களை பாகுபடுத்தும் வகையில் கையில், கழுத்தில் வண்ண கயிறுகள் கட்டப்படுகிறது. அதை அறுத்து எறிந்து விட்டு வர மாநாட்டு அரங்கின் முகப்பில் கத்தரிகோல் வைக்கப்படும். பொது வெளி, தனிநபர்களிடமும் உள்ள சனாதனம் சார்ந்த கருத்து, சடங்கு களை நீக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். அரசு அலு வலகங்கள் மதச்சார்பற்று இருக்க வேண்டும். தனிப்பட்ட மதத்தின் வழி பாட்டு சின்னங்களோ, இடங்களோ இருக்கக் கூடாது. பூஜை செய்யக் கூடாது. இதற்காக உள்ள அரசா ணையை அமல்படுத்த வேண்டும். மநு தர்மம் மீண்டும் கோலோ ச்சினால் தற்போதுள்ள சமூக கட்டமைப்பு தகர்ந்து போகும். சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், சமத்து வத்தை நோக்கிய அனைத்து கூறு களும் பின்னுக்கு தள்ளப்படும். இந்த அபாயத்தை தடுக்க மக்களிடையே பரந்த ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் மாநாடு அமையும். மாநாட்டில், அமைச்சர்கள் உதய நிதி ஸ்டாலின், முனைவர் க.பொன் முடி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சிறுபான் மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், தேவதாசி பெண்கள் விடுதலைச் சங்க பொதுச் செயலாளர் மாலம்மா, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப் பின்போது சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், வர வேற்புக்குழுத் தலைவர் திரைக் கலைஞர் ரோகிணி, செயலாளர் பிரக தீஸ்வரன், சங்கத்தின் மாநில நிர்வாகி கள் மயிலை பாலு, அ.இலட்சுமி காந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.