அல்செமியர் எனப்படும் மூளைக்கோளாறினால் ஏற்படும் பாதிப்புகளை மென்தால்(menthol) எனும் வேதிப்பொருள் குறைக்கிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், மென்தாலை நுகரும்போது அதன் அறியும் திறன் மேம்படுவது காணப்பட்டது. குறிப்பிட்ட வாசனைகள் அல்செமியர் நோய்க்கு மருந்தாகப் பயன்படும் ஆற்றலை இந்த ஆய்வு காட்டுவதாக ஆய்வுக் குழு கூறுகிறது. மூளை மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலங்களை எந்த வாசனை தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்தால் அவற்றை உடல்நலம் மேம்படுவதற்கு பயன்படுத்தலாம். மய்ய நரம்பு அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு ஆகியவற்றில் நுகர்வு மண்டலத்தின் பங்கை கூர்மையாக கவனித்து மென்தால் நோய் எதிர்ப்பு தூண்டும் வாசனை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஆச்சரியகரமாக, அல்செமியர் நோய் உள்ள எலிகளை ஆறு மாதங்களுக்கு குறைவான அளவு மென்தால் நுகர்வுக்கு ஆட்படுத்திய போது அவற்றின் அறிதிறன் (cognitive power) குறைவது தடுக்கப்பட்டது; மேலும் ஆரோக்கியமான இளம் எலிகளில் அது அறிதிறனை அதிகப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது என்கிறார் ஸ்பெயின் நாட்டு சிஐஎம்ஏ ஆய்வு நிலையத்தை சேர்ந்த நோயெதிர்ப்பு வல்லுனர் யுவான் ஜோஸ். ஒரு குறிப்பிட்ட புரதம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாப்பான அளவில் வைத்திருக்கின்றன. இவை அதிகரித்தால் ஆட்டோ இம்யூன் கோளாறுகள் ஏற்படலாம். மென்தால் நுகர்வு இந்த புரதத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றதாம். இதே புரதம் அறிதிறன் குறைவுக்கும் காரணமாக இருக்கலாம். நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் வாசனை நுகர்வுக்கு தொடர்பு உள்ளது மட்டுமல்ல அல்செமியர், பார்கின்சன், சிசோஃபெர்னியா போன்ற கோளாறு உள்ளவர்களுக்கு வாசனை அறியும் திறன் இழப்பதும் உண்மையே.