சென்னை, ஜூன் 12- கன்னியாகுமரி மாவட்டம், விளவங் கோடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த விஜய தரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்ட தாரகை கத்பெர்ட் வெற்றி பெற்றார். இந்நிலையில், தாரகை கத்பெர்ட் புத னன்று சென்னை தலைமைச் செயலகத்தி லுள்ள சட்டப் பேரவைத் தலைவர் அறை யில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற் றுக் கொண்டார். அவருக்கு முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சபா நாயகர் மு. அப்பாவு பதவியேற்பு செய்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எ.வ. வேலு, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை, விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் ராஜேஷ்குமார், ரூபி ஆர். மனோ கரன், பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.