மின்பாதை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர், ஏப்.17 - மின் இணைப்பு வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மின்பாதை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம், கடலூர் நகரம், புதுப்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் 2013 ஆம் ஆண்டு மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்த ஜி.முனுசாமி (வயது 53) என்பவர் காவல்துறையில் பணி புரியும் வன்னியர் பாளையம் மேட்டு தெருவை சேர்ந்த எஸ்.இளஞ்செழியன் என்பவர் கட்டிய புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க அவரது அண்ணன் எஸ்.இளமாறன் என்பவரிடம் லஞ்சமாக ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதுதொடர்பாக எஸ்.இளமாறன் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்ததன் பேரில், மின் பாதை ஆய்வாளர் ஜி.முனு சாமி மீது வழக்கு பதிவு செய்து, 15.03.2013 அன்று மின் பாதை ஆய்வாளர் ஜி.முனுசாமி லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. லஞ்சம் வாங்கிய மின் பாதை ஆய்வாளர் ஜி.முனுசாமி குற்றவாளி என தீர்பளித்து,மூன்று பிரிவுகளில் தலா இரண்டு வருடம் சிறை தண்டனையும், ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி சிறை தண்டனை ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர், ஏப்.17 - சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலை மையில் நடைபெற்றது. பெண் கல்வியினை மேம்படுத்தவும், பெண்களுக்கு உயர்கல்வி அளித்து சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொரு ளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தை களின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
வீராணம் ஏரிக்கரை சாலையில் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க நடைப்பயணம்
சிதம்பரம், ஏப்.17- பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் விதமாக கடலூர் கோட்ட அஞ்சல் துறை சார்பில் காட்டு மன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கரையில் பாரம்பரியத்தை பாதுகாக்க நடைப்பயணம் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் விதமாக உலக பாரம்பரிய நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடலூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக பிற்காலச் சோழ இளவரசர் இராஜாதித்த சோழனால் கி.பி. 10 ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பாரம்பரிய சின்னமாக விளங்கும் வீராணம் ஏரியினை பாதுகாக்கும் விதமாகவும் அதன் முக்கியத்து வத்தை எடுத்துக் கூறும் வகையில் கடலூர் அஞ்சல் கோட்டம் சார்பாக 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்ட பாரம்பரியத்தை பாதுகாப்போம் என்ற நடைப்பயணம் நடைபெற்றது. இந்த பயணத்திற்கு கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் எம்.கணேஷ் தலைமை தாங்கினார். இப்பயணம் லால்பேட்டை துணை அஞ்சல் நிலையத்தில் தொடங்கி வீராணம் ஏரிக்கரை சாலையில் திருசின்னபுரம் வழியாக 4 கி.மீ தூரத்தில் உள்ள நத்தமலையில் நிறைவுற்றது. முன்னதாக திருசின்னபுரம் அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டில் உள்ள குறிப்புகளை சோழமண்டல வரலாற்று தேடல் குழுவை சார்ந்த விக்ரமன் மற்றும் பூங்குழலி ஆகியோர் அஞ்சல் துறை பாரம்பரிய நடை பயண குழுவினருக்கு விளக்கி கூறினர். அதேபோல்காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், சிதம்பரம் மேற்கு அஞ்சல் துறை உட்கோட்ட ஆய்வாளர் பாலமுரளி, லால்பேட்டை அஞ்சல் அதிகாரி காமராஜ் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டு பதாகை களை ஏந்தி வந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம்,உ.செல்லூர் சேஷ நதிக்கு குறுக்கே தடுப்பணை கட்டி பாதூர் மற்றும் களவனூர் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் புதனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.