சென்னை, மார்ச் 27 - மாநில, மத்திய வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டுமென்று கூட்டு றவு வங்கி ஊழியர் சம்மேளனம் வலி யுறுத்தி உள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச் சர் ஐ.பெரியசாமியை, கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் இ.சர்வேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்து பேசினர். அப்போது, கூட்டுறவு கடன், சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளு படி தொகைகளை அரசு விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவ வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும். நகர கூட்டு றவு வங்கிகள் வங்கியியல் போட்டி யினை எதிர்கொள்வதற்கு ஏதுவாக மாவட்ட அளவில் நகர கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஓய்வு ஊதிய குழுவின் அறிக்கையை பெற்று விரைந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கி உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள 3:1 நடை முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தலைவர்கள், மாவட்ட மாறுதல் கோரி பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 27 கோப்புகள் தேங்கி இருப்பதை சுட்டிக்காட்டி விரைந்து வழங்கவும் கோரினர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை குழு ஆரம்பிக்கவும், நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குழு அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.