மதுரை,டிச.25- மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி (நெய்பர்) நிறுவனத்தை துவக்க வேண்டும். மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை பாதுகாத்து முழுமையாக அமல்படுத்திட வேண்டும், விவசாயி களுக்கு பயிர் இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். மல்லபுரம் முதல் மயிலாடும்பாறை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அர சாணை பிறப்பிக்க வேண்டும். உசிலம்பட்டி பகுதி பூ விவசாயிகளுக்கு சென்ட் தொழிற் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை புறநகர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். சேடபட்டி ஒன்றியம் எழுமலையில் நடை பயணத்தை கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.பி.முருகன், செ.முத்துராணி, சேடபட்டி பொறுப்பு செயலாளர் காசிமாயன்,பெ.ராமர், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி, விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.காசி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.