tamilnadu

img

சேலம் சிறை தியாகிகளுக்கு சிபிஎம் செவ்வஞ்சலி

சேலம், பிப்.11- சேலம் சிறை தியாகிகள் நினைவு தின கொடியேற்று விழா மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மத்திய சிறை முன்பு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மத்திய சிறை முதல் சேலம் சிறை தியாகி கள் நினைவகம் வரை வாகன பேரணி நடைபெற்றது. சேலம் சிறைச்சாலையில் 1950 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதியன்று அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த 22 கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களை சிறை நிர்வாகம் சுட்டுக்கொன்றது. அரசியல் கைதிகளாக தங்களை வழிநடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராடியவர்களை சுதந்திர இந்தியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சனியன்று சேலம் மத்திய சிறைச்சாலை முன்பு கொடி யேற்றப்பட்டு, வாகன பேரணி நடை பெற்றது.

முன்னதாக தியாகிகள் நினைவு ஜோதி மத்திய சிறை முன்பிருந்து சிறைத்தியாகிகள் நினைவகம் வரை எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் மேவை. சண்முகராஜா தலைமை  வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார், மூத்த தோழர் சு.பொ.அகத்திய லிங்கம் ஆகியோர் சிறை தியாகிகள் நினைவு தின சிறப்புரையாற்றினர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.உதயகுமார், எம்.குணசேகரன், ஐ.ஞானசௌந்தரி, மேற்கு மாநகர செயலா ளர் எம்.கனகராஜ், சேலம் தாலுகா செயலா ளர் கே.எஸ்.பழனிசாமி, கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, சங்ககிரி தாலுகா செயலாளர் ஆறுமுகம், ஓமலூர் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன், நங்க வள்ளி ஒன்றிய செயலாளர் கே.ராஜாத்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.