சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் இளைய மகன் சி.விஜயகுமார் - கு.வினிதா திருமணம், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் மதுக்கூரில் நடைபெற்றது. இதில், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக மணமக்கள் ரூ. 5000-ஐ வழங்கினர். விழாவில், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மூத்த தலைவர்கள் ஆர்.சி. பழனிவேலு, கோ.நீலமேகம், என்.சீனிவாசன், ஆர்.காசிநாதன், மாவட்டச் செயற்குழு, தமுஎகச மாவட்டச் செயலாளர் விஜயகுமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ஆம்பல் துரை.ஏசுராஜா, வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலர் சேகர், வி.தொ.ச. மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ்குமார், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.