சென்னை, பிப்.4- நாடாளுமன்றத் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக குழுவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி., உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப் பினர்கள் திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என்.குண சேகரன் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த நிலையில், திமுக தலைமை யிலான குழுவை ஞாயிறன்று (பிப்.4) அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக் குழு சந்தித்து பேசியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.சம்பத், ‘‘பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இருதரப்பினரும் மனம் திறந்து கருத்துகளை பறிமாறிக் கொண்டோம். கடந்த தேர்தலில் போட்டி யிட்டதை விட கூடுதல் இடங்களை கேட்டுள் ளோம். சுமூகமான நல்ல உடன்பாடு விரைவில் ஏற்படும்’’ என்றார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘‘முதலமைச்சர் வெளி நாட்டிலிருந்து வந்த பிறகு, பொருத்தமான நேரத்தில் உடன்பாடு ஏற்படும். அடுத்த பேச்சுவார்த்தையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானால் நல்லது; பொருத்த மானது’’ என்றும் அவர் கூறினார்.