சென்னை, பிப். 11 - தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக் கழக த்திற்கு சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பொது வுடமை இயக்கத்தின் முன்னோடி சிந்தனை சிற்பி தோழர் ம.சிங்காரவேலரின் 77வது நினைவு தினம் சனிக்கிழமையன்று (பிப்.11) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். இதன்பின் செய்தி யாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழ கம் சந்தித்த அனைத்து வகையான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் தமிழ கத்தின் தலைசிறந்த சிந்த னையாளர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர். முதல்தலை முறை மார்க்சிய சிந்தனை யாளர்களில் சிங்காரவேலர் குறிப்பிடத்தக்கவர். இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை உரு வாக்கியவர்களில் ஒரு வர். ஆசியாவிலேயே முதன் முதலில் மெரினா கடற்கரை யில் செங்கொடி ஏற்றி மே தினத்தை கொண்டாடியவர். பகுத்தறிவு பிரச்சாரத்தோடு, சமதர்ம பிரச்சாரத்தையும் செய்ய வேண்டும் என்று பெரியாரை ஏற்க வைத்த வர் சிங்காரவேலர்”என்றார். “
கம்யூனிஸ்ட்டுகள் மீது போடப்பட்ட முதல் சதி வழக்கான, கான்பூர் சதி வழிக்கில் கைது செய்யப் பட்டவர் சிங்காரவேலர். பல்வேறு அடுக்கு முறைக்கு உள்ளான போதும், சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க, விஞ்ஞான கண்ணோட் டத்தை வழங்கியவர். நகர்மன்ற உறுப்பினராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை சிங்காரவேலர் உருவாக்கினார். அது படிப்படியாக வளர்ந்து மதிய உணவு திட்டம், சத்துணவு திட்டம், காலை உணவு திட்டமாக பரிணமித்துள்ளது” என்றும் அவர் கூறினார். “விடுதலைப்போராட்ட வீரர், சிறந்த மார்க்சியவாதி, பகுத்தறிவுவாதி என சிறப்பு வாய்ந்த அவரை பெருமைப்படுத்தும் வகை யில், ஒரு பல்கலைக் கழகத்திற்கு சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் பெயரை அரசு சூட்ட வேண்டும். மேலும், மெரினா கடற்கரை யில் உள்ள லேடி வெலிங் டன் வளாகத்திற்கு, சிந்தனை சிற்பி சிங்கார வேலர் சூட்ட வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்வின்போது கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக் கழு உறுப்பினர் வெ.ராஜ சேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, வே. ஆறுமுகம், பகுதிச் செய லாளர்கள் ஜலாலுதீன் (துறைமுகம்), கவிதா கஜேந்தின் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி) உள்ளிட்டோர் உடனிருந்த னர்.