tamilnadu

img

இஸ்ரேலை கண்டித்து கோயம்புத்தூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலை கண்டித்து கோயம்புத்தூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர், ஜூன் 3- பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை இனப்படு கொலை செய்யும் இஸ்ரேல்  மற்றும் அமெரிக்காவின் யுத்த வெறியை கண்டித்து கோயம்புத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனம் மீது கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவ தாக்குதலை தொடுத்து வருகிறது. இதுவரை 62 ஆயிரம் பேர்  உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் பொது மக்களின் குடியிருப்புகளின் மீது மருத்துவ மனைகள் மீது கூட குண்டுகள் வீசப்படு கின்றன. இத்தகைய கொடும் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை நிற்கிறது. இதை கண்டித்தும் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். காசா பகுதியில் இஸ்ரேல் ஏற்கனவே அமைத்துள்ள குடியேற்றங்களிலிருந்து வெளி யேற வேண்டும். இந்திய அரசு பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கு துணை நிற்க வேண்டும். இஸ்ரேல் நாட்டுடன் ஆன ராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை நிறுத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவை உக்கடம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.கனகராஜ், வி.இராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். அனைத்து ஜமாத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சுல்தான் அமீர் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.அஜய் குமார்,  வி.ஆர்.பழ னிசாமி, என்.ஆறுச்சாமி மற்றும்  மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு செய லாளர்கள் உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்ற னர். முடிவில், சிபிஎம் மேற்கு நகரக்குழு செயலாளர் பி.சி.முருகன் நன்றி கூறினார்.