tamilnadu

img

ஏழை பெண்ணின் குடியிருப்புக்கு பாதை கேட்டு சிபிஎம் போராட்டம்

ஏழை பெண்ணின் குடியிருப்புக்கு  பாதை கேட்டு சிபிஎம் போராட்டம்

ஆக்கிரமிப்பை அகற்றி  அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் காழியப்பநல்லூர் ஊராட்சி, துடரிப்பேட்டை கிராமத்தில் புஷ்பமேரி என்ற ஏழை பெண்ணின் குடியிருப்புக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதை இல்லாமல் அவதிப்பட்டார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டு பாரபட்சமாக செயல்படும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து போராட்டம் நடைபெறும் என அறிவித்து, கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் திரண்டனர். இதையடுத்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி புஷ்பமேரி குடியிருப்புக்கு பாதையை ஏற்படுத்தி தந்தனர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.  இப்போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.குணசுந்தரி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அம்மையப்பன், ஐயப்பன், டி.ஆர்.ராணி, செல்வபாக்யவதி மற்றும் ஒன்றியக் குழு, கிளைச் செயலாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.