விருதுநகர், மார்ச் 9- திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழி யர்கள், தொண்டர்கள் மற்றும் அவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி வரும் பாஜக குண்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற போராட்டத்திற்கு நகர் செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன், மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஜி.வேலுச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஏ.அம்மாசி, ஆர்.முத்து வேலு, பி.நேரு, எம்.ஜெய பாரத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இராஜபாளையம் நகர்க் குழு சார்பில் நகர் செயலா ளர் மாரியப்பன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மூத்த தோழர் கணே சன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், மேற்கு ஒன்றியச் செய லாளர் சந்தனகுமார், சாராள், நீராத்திலிங்கம், சுப்பிரமணி யன் செந்தமிழ் செல்வன் ஜெகன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.