சேலம், டிச.19- அடிப்படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சியினர் சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலத்தாம்பட்டி பகுதி மக்களுக்கு சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும், கருப்பனூர் ரோடு பகுதிக்கு சாக்கடை வசதி செய்து தர வேண்டும். மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனைகளை தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கூடம் அருகில் மேல்நிலை நீர் தொட்டி மிகவும் பழுதடைந்து இருப் பதை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரி செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். முன்னதாக, சிபிஎம் சேலத்தாம்பட்டி கிளை செயலாளர் ஜே.பி.விசுவநாதன் தலைமையில், சிபிஎம் சேலம் தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பாலகிருஷ்ணன், டி.பரமேஸ்வரி, மாநக ரக்குழு உறுப்பினர்கள் சி.மயில்வேலன், கே.ரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.