சிபிஎம் கவுன்சிலர் வார்டில் உடற்பயிற்சி கூடம் திறப்
கரூர், ஏப்.21- புகளூர் நகராட்சி சிபிஎம் வார்டில் பழுதடைந்த உடற்பயிற்சிக் கூடத்தை புனரைமைப்பு பணிகள் முடிந்து புதிய உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம், புகளூர் நகராட்சிக்கு உட்பட்ட 22 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார்டு கவுன்சிலராக இந்துமதி செயல்பட்டு வருகிறார். இந்த வார்டில் ஏற்கனவே உடற்பயிற்சிக் கூடம் இருந்து. இதில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் பழுதடைந்து இருந்ததால் பொதுமக்கள், இளைஞர்கள் அதனை பயன் படுத்த முடியாத நிலையில் இருந்தது. உடற்பயிற்சி செய்வதற்கு கூடுதலாக புதிய உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க வேண்டியிருந்தது. எனவே, பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள உடற்பயிற்சி கூட்டத்தை புனரமைப்பு செய்து, புதிய உடற்பயிற்சி உபகரணங்கள் அமைத்து உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது வார்டு கவுன்சிலர் இந்துமதி, நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தை புனரமைப்பு செய்திட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக உடற்பயிற்சி கூடம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்து திங்கட்கிழமை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா 22 ஆவது வார்டு உள்ள உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவிற்கு வார்டு கவுன்சிலர் இந்துமதி தலைமை வகித்தார். புகளூர் நகராட்சி மன்ற தலைவர் குணசேகர் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்துப் பேசினார். கவுன்சிலர்கள் இந்துமதி, தங்கராசு, ராமு ஆகியோர் கல்வெட்டை திறந்து வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம், தொமுச மாவட்டத் தலைவர் அண்ணாவேலு, சிபிஎம் கரூர் ஒன்றியச் செயலாளர் எஸ். பூரணம், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சிஐடியு கரூர் மாவட்ட உதவி செயலாளர்கள் சி. அரவிந்த், நடராஜன், மாதர் சங்க பொறுப்பாளர் சுமதி, புகளூர் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், கவுன்சிலர்கள், வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார்டு கவுன்சிலர் அ.இந்துமதி முயற்சியினால் உடற்பயிற்சி கூடம் புனரமைப்பு பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தமைக்கும், மேலும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்த புகளூர் நகராட்சி தலைவர் குணசேகருக்கும் பொதுமக்கள் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.