tamilnadu

img

திருப்பூர் தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்!

திருப்பூர், பிப். 14 - திருப்பூரில் பின்னலாடை, ஜவுளி உள்ளிட்ட தொழில்கள் கடும்  நெருக்கடியைச் சந்தித்து வரும்  நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் ராயபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொரு ளாளர் திருக்குமரன், நிட்மா தலை வர் அகில் சு.ரத்தினசாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் முருகசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம், தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வேலுச் சாமி, நிட் காம்பேக்டிங் சங்க  பொதுச் செயலாளர் வி.ஈஸ்வர மூர்த்தி, பவர் டேபில் உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நந்த கோபால், திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர் சங்க தலைவர் ருத்ர மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி மற்றும் சார்புத் தொழில்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்ச னைகள் குறித்தும், அதில் இருந்து மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக் களை முன்வைத்தனர். அத்துடன்  டீமா சங்க நிர்வாகி செந்தில்வேல், ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தி யாளர் சங்க நிர்வாகி செந்தில்வேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணைச் செயலாளர் குமார் துரை சாமி, விசைத்தறியாளர்கள் சார்பில்  அய்யம்பாளையம் சோமசுந்தரம் உள்ளிட்டோர் தங்கள் கருத்து களைப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன், கோவை தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தொழில் துறையினர் முன்வைத்த பிரச்சனைகள் தொடர்பாக உரையாற்றினர். திருப்பூர் மாவட்ட தொழில் துறை  சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து  நாடாளுமன்றத்திலும், ஒன்றிய அர சின் கவனத்துக்கும் கொண்டு சென்று தீர்வு காண உரிய முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்வோம் என்று பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் உறுதி கூறினர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. உண்ணிகிருஷ்ணன், டி.ஜெயபால், ச.நந்தகோபால், செ.மணிகண்டன், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செய லாளர் பி.ஆர்.கணேசன், பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் மற்றும் பல்வேறு உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.