tamilnadu

img

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது

புதுக்கோட்டை, ஏப்.17-  காஞ்சிபுரம் மாவட்டத் தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜெரால்டு என்கிற சசிகுமார் (35). இவர் வறுமையில் வாடும் இளைஞர்கள், இளம் பெண்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலை மைச் செயலாளர் இறை யன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், உமா மகேஸ்வரி ஐஏஎஸ், மகிழ்மதி ஐஏஎஸ், ஜெயந்தி ஐஏஎஸ், அகி லாண்டேஸ்வரி ஐஏஎஸ் உள்ளிட்டோரின் கையெ ழுத்துகளுடன் தமிழ்நாடு அரசு முத்திரையைப் பயன்  படுத்தி போலி பணி ஆணை களை வழங்கியுள்ளார்.  இதன்மூலம் தமிழ்நாட் டின் பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் வேட்டை நடத்தியிருப்  பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ரூ.80  லட்சம் அளவுக்கு வசூலித் துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களு டன் புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு,  மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வந்திதா பாண்டே ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்  பில் புகார் மனு அளிக்கப்பட்  டது. கட்சியின் மாவட்டக்குழு சார்பிலும் கண்டனத் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

புகார் மனு அளிக்கப் பட்டு 10 நாட்களைக் கடந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித் தும், உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், இழந்த தொகையை மீட்டுத்தரக் கோரியும் திங்களன்று (ஏப் ரல் 17) புதுக்கோட்டை  மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஊர்வல மாகச் சென்று மாவட்ட  காவல்துறை கண்காணிப்பா ளர் அலுவலகத்தை முற்று கையிடுவதற்காக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்களும், கட்சியினரும் குவிந்தனர். 

குற்றவாளி கைது

இந்நிலையில், மோசடி செய்த நபரை தனிப்படை அமைத்து காஞ்சிபுரத்தில் கைது செய்துள்ளதாகவும், அவரை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்திருப்பதாக வும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், ‘‘அரசு உயர் அதிகாரிகளின் பெய ரில் போலி பணி ஆணை  வழங்கி மோசடி செய்த  செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது. புகார் மனு அளித்து 10 நாட்களுக்கும் மேலாகி யும் காவல்துறை உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. சிபிஎம் சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகுதான் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறை குற்ற வாளியை கைது செய்த தோடு கடமை முடிந்து விட்டது என்று நின்றுவிடக் கூடாது. குற்றவாளி சசிக் குமார் என்ற ஜெரால்டு மீது  உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.  அவரின் சொத்துக்கள் மற் றும் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும். பாதிக் கப்பட்டவர்கள் இழந்த தொகை  முழுமையாகக் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாரைச் சந்தித்தும் இக்கோரிக்கை குறித்து வலியுறுத்தப்பட் டது. இந்நிகழ்வில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், ஜி. நாகராஜன், த.அன்பழன், சு. மதியகழன், துரை.நாராய ணன், எஸ்.ஜனார்த்தனன் மற்றும் மாவட்டக்குழு உறுப்  பினர்கள் பங்கேற்றனர்.