திருப்பூர், டிச.11- ஒடுக்குமுறைக்கு எதிராக வும், கார்ப்பரேட் ஆதரவு, மத வெறி அரசியல் இரண்டுக்கும் எதிராகவும் கம்யூனிஸ்ட்டுகள் களப்பணியாற்றுவதால், ஆர்எஸ்எஸ்சும், மோடியும் செங்கொடியை கண்டாலே அஞ்சுகிறார்கள் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் விஜூகிருஷ்ணன் கூறினார். 106 ஆவது நவம்பர் புரட்சி தினம் மற்றும் தீக்கதிர் சந்தா அளிப்பு விழா திருப்பூரில் டிசம்பர் 10 ஞாயிறன்று எழுச்சியுடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் பல் லாயிரக்கணக்கானோர் பங் கேற்ற செந்தொண்டர் பேரணி நடைபெற்றது. நிறைவாக யுனிவர்சல் திரையரங்கம் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்றார். கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். விஜு கிருஷ்ணன் பேசுகை யில், சோசலிசப் புரட்சியின் மேன்மையையும், சோவியத் ஒன்றியத்தின் பெருமைகளை யும் எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசியதா வது:
54 இன்ச் மார்பு கொண்ட பிரதமர் என்று கூறும் மோடி யும், ஆர்எஸ்எஸ் தலைவ ரும் செங்கொடியைக் கண்டு அஞ்சுகிறார்கள். இவர்களின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை க்கும், மத வெறி அரசியலுக் கும் எதிராக எந்த சமரசமும் இன்றி உறுதியோடு போரா டுவது செங்கொடி இயக்கம் என்பதால் தான் அவர்கள் அஞ்சுகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்து, பத்து ஆண்டுகள் ஆகப்போ கிறது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இது வரை நிறைவேற்றப் படவில்லை. ஆனால் நாடு முழுவதும் 1 லட்சம் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர் கள் தற்கொலை செய்துள் ளார்கள். 3 லட்சம் தினக்கூலி கள் தற்கொலை செய்துள் ளார்கள். 50 ஆயிரம் இளை ஞர்கள் தற்கொலை செய்துள் ளார்கள். வேலையின்மை அதிகரித்து ள்ளது. உலகத்தி லேயே இத்தனை லட்சம் மக்களின் தற்கொலைக்கு காரணமான ஒரே அரசாக பாஜக அரசு உள்ளது. விவசாயிகள் வருமா னத்தை இரட்டிப்பாக மாற்று வோம் என்று கூறினார்கள். அதற்கு மாறாக பாதியாக குறைந்துள்ளது. விளைவித்த பொருட்களுக்கு 1.5 மடங்கு விலை தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்று வரை செவிசாய்க்காமல் உள்ளார் கள். ஒரு குவிண்டால் நெல்லு க்கு 2,351 ரூபாய் வழங்குவ தாக கூறுகிறார்கள். ஆனால் ஒரு விவசாயி கூட அதைப் பெற முடியவில்லை. உபி, ம.பி போன்ற பல வட மாநி லங்களில் அரசு நெல் கொள் முதல் நிலையங்களே இல்லை.
பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விட்டது. எரிவாயு சிலிண்டர் ஆயிரம் ரூபாய் க்கு மேல் விற்கப்படுகிறது. ஆனால் ராஜஸ்தானில் தேர்த லுக்காக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 450 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் கொடுப்போம் என்று கூறி யிருக்கிறார்க ள். 400 ரூபாய் க்கு விற்கப்பட்ட கேஸ் சிலிண் டர் இன்று 1200 ரூபாய்க்கு ஆனதற்கான காரணமே இவர்கள்தான். பொய்யான வாக்குறுதிகளை தந்து தேர்தலில் வெற்றி பெறுவதே இவர்களின் வழக்கம். இவர் கள் தற்போது ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஏன் 450 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுவ தில்லை? அதேபோல, திருப்பூர் மாவட்டம் உட்பட ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற தவறான கொள்கைகளால் அழிந்து கொண்டிருக்கி றது. சிறு குறு தொழில்கள் முற்றிலும் அழியும் நிலை யில் உள்ளது. குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகளுக்காக ஒட்டு மொத்த சிறு குறு தொழில்களையும் அழித்து, நாட்டையே சூறையாடிக் கொண்டி ருக்கிறார்கள். பாஜக ஆட்சியாளர்கள் தோற்கடிக்க முடியாதவர்கள் அல்ல என்பதை தலைநகர் தில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் காட்டு கிறது. மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு புள்ளியைக் கூட மாற்ற மாட்டோம் என கொக்கரித்தார்கள். ஆனால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு தீவிரமாகப் போராடியதன் விளைவாக மோடி அரசு விவ சாயிகள் முன் மண்டியிட்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. விவசாயி களும், தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்தால் எவ்வ ளவு வலிமையான சக்தி என்பதை இப்போராட்டங்கள் உலகிற்கு காட்டின. சமீபத் தில் இலங்கையில் இனவாத ராஜபக்சே அரசை அங்குள்ள இளைஞர்களும், தொழிலா ளர்களும் ஒன்று திரண்டு ஓட ஓட விரட்டி அடித்தனர். அத்த கைய முடிவை இந்திய விவ சாயிகளும், தொழிலாளர் களும் ஒன்று சேர்ந்து 2024 தேர்தலில் மோடி அரசுக்கு தருவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.