நத்தம், மார்ச் 21- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ‘இந்தியா’ கூட் டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஆர்.சச்சிதானந்தம் அறிமுக கூட்டம் நத்தம் மேல மேட்டுப்பட்டியில் புத னன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாநில துணை பொதுச் செய லாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமை வகித்து வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர். ஐ.பெ.செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் மதுக் கூர் ராமலிங்கம், கே.பால பாரதி, என்.பாண்டி, திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஆண்டி அம்பலம், மேற்கு மாவட்டப் பொருளாளர் விஜயன், தெற்கு ஒன்றியச் செயலா ளர் ரத்னகுமார், வடக்கு ஒன்றியச் செயலாளர் பழ னிச்சாமி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகரச் செயலாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பி னர் முத்துக்குமாராசாமி, சாணார்பட்டி ஒன்றியச் செய லாளர்கள் தர்மராஜ், மோகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் சின்னக் கருப்பன், வெள்ளைக் கண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.