tamilnadu

img

திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சிபிஎம், தீஒமு தலைவர்களுடன் தலித் மக்கள் ஆலயப்பிரவேசம்

சேலம், பிப்.4- திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவிலில், சனியன்று தலித் மக்களு டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் ஆலயப் பிரவேசத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவில் இந்து  சமய அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ளது. கடந்த ஜன.27 ஆம் தேதி யன்று தலித் இளைஞர் பிரவீன்குமார், கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட கேட்டதற்காக, தீண்டாமைக் கொடு  மைக்கு உள்ளானார். மேலும், அக் கோவில் முன்பு திமுக பிரமுகரும், திரு மலைகிரி ஊராட்சி மன்ற தலைவரு மான மாணிக்கம், பிரவீன் குமார் மற்றும்  அவரின் பெற்றோரை ஊர் பொதுமக் கள் முன்னிலையில் இழிவான சொற்  களால் பேசி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி யது. இதுகுறித்து தமிழக அரசு உட னடியாக உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்  னணி பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் பிரவீன்குமாருக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கின.

தொடர் வலியுறுத்தல்

இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் தலை வர்கள், தீண்டாமைச் செயலில் ஈடு பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்  கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மனு அளித்தனர். அதன்  பேரில் மாணிக்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும்,  தலித் உள்ளிட்ட அனைத்து சமூக மக்க ளுக்கும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவில் வழிபாட்டு உரிமையை வழங்கி, அதனை உறுதி செய்ய வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது.  இதன்பின், அனைத்து சமூக மக்க ளும் பெரிய மாரியம்மன் கோவிலில் சென்று வழிபடலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அத னைத்தொடர்ந்து சேலம் இந்து சமய  அறநிலையத்துறை துணை ஆணையர்  மற்றும் சேலம் மேற்கு வட்டாட்சி யர் தலைமையில் கோவில் திறக்கப் பட்டது. மேலும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தலித் மக்கள் ஆலயத்திற்குள் சென்று வழி பாடு செய்தனர்.

ஆலயப் பிரவேசம்

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கோவிலில் தலித் உள்ளிட்ட அனைத்து  சமூக மக்கள் அனைவரும் வழிபடும் வகையில், சனியன்று காலை தலித் மக்களுடன் இணைந்து ஆலய பிர வேசத்தில் சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் ஈடு பட்டனர். சிபிஎம் சேலம் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா, தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவ ஞானம் ஆகியோர் தலைமையில் அனைத்து சமூக மக்களும் வழிபட்ட னர். பின்னர் செய்தியாளர்களிடம் மேவை.சண்முகராஜா பேசுகையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்  பாட்டில் உள்ள திருமலைகிரி மாரி யம்மன் கோவிலில் அனைத்து சமூக  மக்களும் சென்று வழிபட உரிமை யைப் பெற்றிருப்பது வரவேற்கத்தக் கது. இது சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் தொடர் போராட்டத் திற்கு கிடைத்த வெற்றி. இப்பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை  எடுத்ததற்கு மாவட்ட ஆட்சியருக்கு நன்றி. மேலும், மாநிலம் முழுவதும் இதுபோன்று தீண்  டாமைக் கொடுமைகள் நடக்கின்றன. அதனை தமிழ்நாடு அரசு கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கோவில்களில் அனைத்து சமூக மக்களுக்கும் வழிபாட்டு உரிமை யை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

மிகுந்த மகிழ்ச்சி…

மேலும், ஆலய பிரவேசத்தில் ஈடு பட்ட தலித் இளைஞர்கள் தெரிவிக்கை யில், கோவிலுக்குள் நுழைவது நீண்ட  கால ஆசையாக இருந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையால்  தற்போது கோவிலுக்குள் சென்று சாமி  தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கோவிலில் தொட ர்ந்து சாமி தரிசனம் செய்யும் உரிமை யைப் பெற்றுத் தந்த அனைவருக்கும் தங்  கள் நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம், என்றனர். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குணசேக ரன், ஏ.ராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில நிர்வாகி கனக ராஜ், மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தை வேல், மாவட்ட நிர்வாகிகள், திருமலை கிரி பகுதி தலித் மக்கள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.