tamilnadu

சிபிஎம் மறியல் போராட்டம் அறிவிப்பு பேருந்துகளை உடனே இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை

சிபிஎம் மறியல் போராட்டம் அறிவிப்பு பேருந்துகளை உடனே இயக்க  போக்குவரத்து கழகம் நடவடிக்கை

பொன்னமராவதி, ஜுன் 27-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கங்காணிப்பட்டி வழியாக சென்று வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, தற்போது வராததைக் கண்டித்தும், ஆலவயல், நகரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவ மாணவியர் சென்றுவர வசதியாக கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் கங்காணிப்பட்டி கிளைச் செயலாளர் கமலம் தலைமையில் ஜுன் 26 ஆம் தேதி அம்மன் குறிச்சியில் சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் பொன்னமராவதி மண்டல துணை வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அரசு போக்குவரத்து கழக பொன்னமராவதி கிளை மேலாளர், கங்காணிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணாக்கர்களின் போக்குவரத்து வசதிக்காக புதுக்கோட்டையில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு காரையூர், இடையாத்தூர், கங்காணிப்பட்டி, சொக்கநாதபட்டி, அம்மன் குறிச்சி, ஆலவயல், தூத்தூர், மணப்பட்டி வழியாக பொன்னமராவதிக்கு காலை 9.30 மணி அளவில் சென்றடைவதற்கும், மீண்டும் பொன்னமராவதியில் இருந்து நண்பகல் 2.30 அளவில் புறப்பட்டு புதுக்கோட்டை சென்றடைவதற்கும் ஒரு புதிய பேருந்து  இயக்கப்படும்.  அதேபோல், மாலை 5 மணி அளவில் பொன்னமராவதியில் இருந்து ஏற்கனவே இயக்கப்பட்ட பேருந்து தடம் எண் 11 ஐ, ஏற்கனவே இயக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து கழக பொன்னமராவதி கிளை மேலாளர் உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  கூட்டத்தில் காவல் ஆய்வாளர் பத்மா, காரையூர் வருவாய் ஆய்வாளர், மறவாமதுரை கிராம நிர்வாக அலுவலர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், விதொச ஒன்றியப் பொறுப்பாளர் நல்லதம்பி, சிஐடியு பொறுப்பாளர் குமார், மாதர் சங்கத்தின் லதா, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி, கட்சியின் கிளைச் செயலாளர் கமலம் ஆகியோர் பங்கேற்றனர்.