tamilnadu

உக்ரைனில் படித்த தமிழக மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்கிடுக!

சென்னை,மார்ச் 15- உக்ரைனில் படித்த தமிழக மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்கிட ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மார்ச் 14, 15, 16 ஆகிய தேதி களில் சேலத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலை மையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.   இந்தியாவில் இடம் கிடைக்கா மல், தனியார் மருத்துவக் கல்லூரி கள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தும் நிர்வாகம் கேட்கும் கட்ட ணம் செலுத்த இயலாமல் வெளிநாடு களில் எங்கெல்லாம் இதைவிட குறைவான கட்டணத்தில் மருத்து வப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக் கிறதோ அங்கெல்லாம் இந்திய  மாணவர்கள் செல்கின்றனர். உக்ரைன் போன்று அந்நாடுகளில்  போர் அல்லது உள்நாட்டு நெருக்கடி கள் போன்ற அசாதாரண சூழல் ஏற் படும் போது பல்வேறு இன்னல் களுக்கு ஆளாகின்றனர். தற்போது உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்களை விரை வாகவும், பத்திரமாகவும் மீட்டுக் கொண்டு வர  தமிழ்நாடு அரசு  எடுத்த முயற்சி, முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது ஆகி யவை அவர்களுக்கு பெரும் ஆறு தலைத் தந்துள்ளது. இருப்பினும் படிப்பு தொடர்வது குறித்த நிச்சய மற்ற சூழலில் உள்ளனர். அவர் களது எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உண்டு.    

            எனவே, மருத்துவக் கல்லூரி களில், கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப கூடுதல் இடங்கள் தொடங்க அனுமதி வழங்கிட தேசிய மருத் துவ ஆணையச் சட்டத்தின் (NMC Act) கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளைப் பயன்படுத்தி, அவசியம் ஏற்படின் விதி திருத்தங்களை மேற்கொண்டு, ஒரு முறை சிறப்பு நிவாரணமாக (one time special relief) போரி னால் பாதிக்கப்பட்டு தாயகம்  திரும்பிய மாணவர்களுக்கு அவர வர் படிக்கும் அதே ஆண்டில் அவர் களின் கல்வியை இந்தியாவில்  தொட ர்ந்து,  படிப்பை முடித்து மருத்துவ ராக பணிபுரிய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு,  அத்தகைய வாய்ப்புள்ள மாநில அரசு கல்லூரி களை அடையாளம் கண்டு, தேவை  ஏற்பட்டால் கூடுதல் வசதிகள் ஏற் படுத்தித் தந்து தமிழக மாணவர்கள் நமது மாநிலத்திலேயே படிப்பைத் தொடர்ந்து பட்டம் பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து, எந்தெந்த ஆண்டில் எத்தனை மாணவர்கள் படிப்பைத் தொடர வேண்டிய நிலையில் இருக் கிறார்கள், வாய்ப்புள்ள கல்லூரி கள் எவை என்பதை ஆய்வு செய்து, உரிய அனுமதியை ஒன்றிய அர சிடம் பெற்றிட வேண்டும்.  அதே  போல் பிற படிப்புகள் படிக்கவும், அந்தந்தப் பல்கலைக்கழகம் மற்றும் உரிய அமைப்புகளிடம் சிறப்பு அனுமதி பெற்று விதிகளைத் தள ர்த்தி மாணவர்களை சேர்க்கலாம். மாணவர்களை மீட்டுக் கொண்டு வருவதில்  காட்டிய கவனத்துக்கு  ஒப்பாக,  அவர்கள் கல்வியும், எதிர் காலமும் பாதிக்கப்படாமல் பாது காக்க தமிழக அரசு  விரைந்து  நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.