tamilnadu

img

ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்க!

சென்னை,ஏப்.10- மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையும், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.10) முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்  தீர்மானத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகைமாலி பேசுகை யில்,“தமிழ்நாடு ஆளுநர் ரவியின்  எதேச்சதிகார நடவடிக்கையை விமர் சிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. முதலமைச்சரின் உணர்வுகளோடு எங்களது உணர்வுகளையும் சேர்த்துக் கொள்கிறோம்”என்றார். ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக் கும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளதை மாண வர்களிடம் பெருமையாக கூறும் ஒரு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவை தானா? என்பதை முடிவு செய்ய வேண்டும். எனவே, ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று  அவர் வலியுறுத்தினார். முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை வரவேற்று செல்வப்பெருந்தகை (காங்.),  ஜி.கே.மணி(பாமக), சிந்தனை செல்வன்(விசிக), சதன்திருமலை குமார்(மதிமுக), டி.ராமச்சந்தி ரன்(சிபிஐ), ஜவாஹிருல்லா (மமக), வேல்முருகன், ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.   தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் நண்பராக இருக்க மாட்டேன் என்று கூறிக்கொள்ளும் ஆளுநர் ஆர்.என். ரவி இனி ஒரு  நிமிடம்கூட தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. அவரை ஒன்றிய அரசும் குடியரசுத் தலைவரும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது  பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண் டதற்கு மாறாக செயல்பட்டு வரும்  அவர் ரவி தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினமா செய்து விட்டு ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நாகைமாலி வலி யுறுத்தினார்.