tamilnadu

சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சாரம் இன்று துவங்குகிறது!

சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சாரம் இன்று துவங்குகிறது!

சென்னை, ஜூன் 10-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  10 நாள் கிளர்ச்சிப் பிரச்சாரம் புதன்  கிழமை (ஜூன் 11) அன்று துவங்கு கிறது. மக்களின் வாழ்வாதாரக் கோரிக் கைகளை நிறைவேற்ற ஒன்றிய - மாநில  அரசுகளை வலியுறுத்தி, நகரங்கள்,  கிராமங்கள் தோறும் நடைப்பயணமாக வும், இருசக்கர வாகனங்களில் சென்  றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற னர். நாடு முழுவதும், வகுப்புவாத அரசி யலை முன்னிறுத்தி மக்களைப் பிளவு படுத்துவதுடன் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியலை முன்னெ டுத்து எதேச்சதிகார நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வரு கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்  களின் விலைகள் உயர்ந்துள்ளன. வேலையின்மை, இடம் பெயர்தல் அதி கரித்துள்ளது.  மாநில அரசுகளுக்கு நியாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய கல்வி, இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட தேவைகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமான போக்குகள் உள்ளன.  எனவே, தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி  வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாகவும், தினக் கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் எனவும் ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி இந்தப் கிளர்ச்சிப் பிரச்சாரம் நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசுப்பணி உள்ளிட்ட பல்வேறு பணி களில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும்; ஒப்பந்த  அடிப்படையில் நியமனம் செய்வதை  கைவிட்டு நிரந்தர பணி நியமனங்களை  செய்ய வேண்டும்; பட்டியல் சாதி மக்கள் மீதும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பள்ளிகளிலும் அரங்கேறும் சாதி ரீதி யான தாக்குதல்களைத் தடுக்க வேண்  டும்; முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ. சகாயம் அளித்த ஆய்வு அறிக்கையை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்  டும். தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்  களை மீட்டு ஏழை - எளிய பட்டியலின  மக்களுக்கு வழங்கிட வேண்டும்; குடி மனைப் பட்டா கோரி விண்ணப்பித் துள்ள மக்கள் அனைவருக்கும் பட்டா  வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை ஒன்றிய - மாநில அரசு கள் நிறைவேற்ற வேண்டும் என வலி யுறுத்தி, ஜூன் 11 துவங்கி 20-ஆம் தேதி  வரை இந்தப் பிரச்சார இயக்கம் நடை பெறுகிறது.

சென்னையில் உ.வாசுகி - பெ.சண்முகம் பங்கேற்பு

புதன்கிழமை (ஜூன் 11) காலை 10.30 மணிக்கு மத்திய சென்னையில் (பிராட்வே குறளகம் அருகில்) துவங்கும் நடைபயண பிரச்சார இயக்  கத்தை கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைக்கி றார். வடசென்னையில் (ஆர்.கே.நகர், 41வது வட்டம், சுண்ணாம்பு கால்வாய்,  எச் 6 காவல் நிலையம் அருகில்) மாலை 4.30 மணிக்கு துவங்கும் நடை பயணத்தை, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி துவக்கி வைக்கிறார்.