சீமானுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
சென்னை, ஜன. 22 - 2019-ஆம் ஆண்டு விக்கி ரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையின் போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூரில் போலீசார் கல வரத்தை தூண்டும் வகை யில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், புத னன்று வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடி யாது எனவும், பிடிவா ரண்டை ரத்து செய்வது குறித்து சீமான் தரப்பு விக்கிர வாண்டி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தங்கம் விலை புதிய உச்சம்: ரூ. 60 ஆயிரத்தை தாண்டியது!
சென்னை, ஜன. 22 - தங்கம் விலை முதல் முறையாக 60 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் புதன்கிழ மை (ஜன.22) ரூ. 7 ஆயி ரத்து 525-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை யில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, ரூபாய் 60 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. 2025-ஆம் ஆண்டு தொடக்கம் முதலே, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்நி லையில், முதல் முறையாக தங்கம் விலை ஒரு பவுன் 60 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டி யுள்ளது.
கொலையாளியை மனநல மருத்துவமனைக்கு அனுப்பியது மும்பை நீதிமன்றம்
2023 இல் ரயிலில் மூன்று முஸ்லிம் பயணிகளையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரியையும் சுட்டுக் கொன்ற ரயில்வே காவலர் சேத்தன் சிங் சவுத்ரியை மருத்துவப் பரிசோதனைக் காக தானேயில் உள்ள மனநல மருத்துவ மனைக்கு அனுப்ப மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுத்ரி மனநோயால் பாதிக் கப்பட்டுள்ளதாக தற்போது அவர் அடைக்கப்பட்டுள்ள அகோலா சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்த தையடுத்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தரகர்கள் தலையீட்டை தடுக்க ரயில்வே புதிய முயற்சி!
சென்னை, ஜன. 22 - பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயண சீட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடுகின்றன. தரகர்கள் இடையில் புகுவது தான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரகர்கள் தலையீடு தடுக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. முக அடையாளம், கைரேகை சரிபார்த்தல், தரவுகளை தீவிரமாக ஆய்வுசெய்ய கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற ரயில்வே பாதுகாப்பு படை ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து!
சென்னை, ஜன. 22 - காவல்துறைக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் குரூப் -1 தேர்வு நடத்தி, டி.எஸ்.பி. க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். டி.எஸ்.பி.க்களாக பணியில் சேரு பவர்கள், பின்னர் எஸ்.பி.க்களாக பணியாற்றும் போது பதவி மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படும். அந்த வகையில், தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ‘மணி, செல்வ குமார், சுதாகர், எஸ்.ஆர். செந்தில் குமார், முத்தரசி, பெரோஸ் கான் அப்துல்லா, சக்திவேல், நாகஜோதி, ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகனன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், எஸ். சரவணன், டி. செந்தில்குமார், மகேந்திரன், சுப்பு லட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டா லின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்து தெரி வித்து, முதல்வர் ஸ்டாலின் வெளி யிட்டுள்ள பதிவில், ‘மாநிலக் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக் கான அங்கீகாரமாக இந்தியக் காவல் பணி அதிகாரிகளாக உயர்வு பெற்றுள்ள 25 பேருக்கும் எனது பாராட்டுகள்! தங்கள் பணி சிறக் கட்டும்!’ என குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆய்வக மேம்பாட்டிற்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
சென்னை, ஜன. 22 - தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலை யத்திற்கு, ரூ. 12 கோடி மதிப்பில் நவீன வகை கருவிகளுடன் மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு ஆய்வக மேம்பாட்டிற் கான நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாது காப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடைவதற்காக, 2024-25ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் மூலம், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் முக்கியமாக பச்சிளம் குழந்தைகள், கருவுற்றவர்கள், முதியோர் மற்றும் பல இணை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு, பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் இயக்க முன்னோடி எல். கோபாலகிருஷ்ணன் மறைவு!
சென்னை, ஜன. 22 - ஆசிரியர் இயக்க முன்னோடி தோழர் எல். கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஆசிரியர் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவான தோழர் எல். கோபாலகிருஷ்ணன் தனது 102-ஆவது வயதில் காலமானார். வா. இராமுண்ணி போன்ற முன்னோடித் தலைவர்களுடன் இணைந்து செயலாற்றியவர் தோழர் எல். கோபாலகிருஷ்ணன்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்; சங்கப் பணிக்காக அடக்குமுறை நட வடிக்கைகளை எதிர்கொண்டவர்; ஆசிரியர்களின் போராட்டத்தில் தலைமையேற்று சிறை சென்றவர். அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டி ருப்பது சமூகத்தின் பால் அவர் கொண்டுள்ள நேசத்தின் அடையாள மாகும். அவரின் மறைவு ஆசிரியர் இயக்கங்களுக்கும், முற்போக்குச் சக்திகளுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமது நெஞ்சார்ந்த அஞ்ச லியையும், அவரது மகள் விஜயட்சுமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானை கூட்டங்கள் அட்டகாசம்
இராஜபாளையம், ஜன.22- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்குப் பகுதியில் கம்பத்து ஊரணி பகுதியில் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இதில் தென்னை, மா, வாழை போன்ற பயிர்கள் பயிரிட்டுள்ளன. இப்பகுதி வழியாக யானை கூட்டங்கள் ஐந்து முதல் ஆறு வரை தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரம், மாமரம், வாழை மரம் மற்றும் தண்ணீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விடுகிறது. இது குறித்து வனத்துறையினர், வருவாய்த்துறைனரிடம் கூறினாலும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து இரண்டு மாத காலமாக யானை கூட்டங்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என விவசாயி கூறினார். இந்த பகுதிக்கு யானைகள் வராமல் தடுக்க அகழிகள் தோண்டவும், மின்வேலிகள் அமைத்து தோட்டத்தை பாதுகாக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்திட ஒன்றிய பாஜக அரசு முயற்சி
ப.மாணிக்கம்தாகூர் எம்.பி கடும் தாக்கு
விருதுநகர், ஜன.22- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாணிக்கம்தாகூர், பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த விவசாயத் தொழிலா ளர்களுக்கு 7 வாரங்களாக சம்பளம் வழங்க வில்லை. இது மிகவும் கவலைக்குரிய விஷய மாகும். மோடி அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் வேலையை செய்து வருகிறது. அதனை முறையாக செயல்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மக்கள வையில் போராடி வருகிறோம். மேலும், விருதுநகர் மாவட்டத்தில், தெரு நாய்கள் பிரச்சனை அதிகமாக உள்ளது. அதைப் பற்றியும் விவாதித்தோம். ஆனால், தெரு நாய் களை கட்டுப்படுத்திட ஒன்றிய அரசின் விதிமுறை கள் கடுமையாக உள்ளது. அதிலும் மாற்றம் வேண்டும் என மக்களவையில் வலியுறுத்துவோம். ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல விண்ணப்பங் கள் நிரகாரிக்கப்பட்டுள்ளன. எம்.எஸ்.எம்.இ. யில் மானியம் வழங்க மறுக்கின்றனர். மேலும், பிர தமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஏராளமான பய னாளிகளுக்கு பணம் வழங்கப்படாமல் உள்ளது என்றார். இதையடுத்து, பரந்தூர் பிரச்சனை பற்றி விஜய் பேசியது பற்றிய கேள்விக்கு, விஜய் பொதுப் பிரச்சனைகளைப் பற்றி பேசத் துவங்கி இருப்பது மகிழ்ச்சியான விசயம். ஜனநாய கத்தில் வரவேற்கத்தக்கது. ஆனால், அதற் கென்று முறை உள்ளது. போராடும் மக்களின் கோரிக்கைகள் பற்றி பல கட்சிகள் நேரில் சென்று பார்த்துள்ளன. அதேவேளை, இதில் அரசியல் செய்யாமல், தமிழகத்தின் வளர்ச்சி யையும் பார்க்க வேண்டும். அரிட்டாபட்டிக்கு தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. ஆனால், பரந்தூருக்கு ஏன் செய்ய வில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் என்ற கேள்விக்கு, அரிட்டாபட்டி சுரங்கம் அமைக்க யாருக்கு டெண்டர் வழங்கப்பட்டது என தெரிந்த வுடன் மக்கள் போராடத் துவங்கியுள்ளனர். ஆனால், 2022இல் பரந்தூர் விமான நிலைய விரிவாக்கப் பணி துவங்கப்பட்டது என தெரி வித்தார். அரிட்டாபட்டி குறித்து நாடாளுமன்றத் தில் நாங்கள் குரல் கொடுத்துள்ளோம். விஜய் மக்கள் பிரச்சனை பற்றி லேட்டாக தெரிவித் துள்ளார் என்றார். ஈரோட்டில் பெரியாரை முதன்மைப்படுத்தி திமுக வாக்கு சேகரிக்குமா என சீமான் கூறியது பற்றிய கேள்விக்கு, சீமான், எடிட் செய்யப்பட்ட படத்தைப் பற்றிய கதையைக் கூற வேண்டும். அது தற்போது முக்கியமான பிரச்சனையாக தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட, சிறுபான்மையினர் என அனைவராலும் போற்றப்படுகின்ற தலைவராக பெரியார் உள்ளார் என்றார் அவர்.
தமிழ்ப் பல்கலை.யில் துணைவேந்தர் பொறுப்புக்குழு நியமனம்
தஞ்சாவூர், ஜன.22 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 5 பேர் கொண்ட துணை வேந்தர் பொறுப்புக் குழு திங்கள்கிழமை நியமனம் செய்யப்பட்டது. இந்தப் பல்கலைக் கழகத்தில் 2017-18 ஆம் ஆண்டில் 40 பேராசிரி யர்கள், இணைப் பேராசிரி யர்கள், உதவிப் பேராசிரி யர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறை கேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலை யில், அவர்களுக்கு தகுதி காண் பருவம் நிறைவேற்றப் பட்டதாக அறிவிக்கப்பட் டது. இது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, நில அறிவியல் துறைப் பேராசி ரியர் க.சங்கர் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்கப் பட்டு, தொடர்ந்து பணி யாற்றி வருகிறார். இந்நிலையில், புதிய துணைவேந்தர் நிய மிக்கப்படும் வரை பல்கலைக் கழகத்தை நிர்வாகம் செய்வது தொடர்பாக ஆட்சிக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள் கிழமை (ஜன.20) நடை பெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் வே. ராஜா ராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந.அருள், ஆட்சிக் குழு உறுப்பினர்களான பேராசிரி யர்கள் வீ.அரசு, பெ.பாரத ஜோதி, சி.அமுதா ஆகி யோர் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பி னர்களாக நியமிக்கப்பட்ட னர். இதற்கு ஒப்புதல் பெறு வதற்காக தமிழக ஆளுந ரும், பல்கலைக்கழக வேந்த ருமான ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆளுநரிடமிருந்து ஒப்புதல் கிடைத்த பிறகே துணைவேந்தர் பொறுப்புக் குழுவின் செயல்பாடுகள் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.