tamilnadu

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஓடையில் தடுப்புச்சுவர் கட்டியதில் ஊழல் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 21-  வத்திராயிருப்பு நொண்டி விருசு ஓடை யில் தடுப்புச் சுவர் கட்டியதில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் ஊழல் தடுப்பு துறை அலு வலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புப் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “வத்திராயிருப்பு ராமசாமியாபுரம் ஊராட்சி யில் நொண்டி விருசு ஓடையில், மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்  பில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. தரமற்ற பொருட்களைக் கொண்டு தடுப்புச்சுவர் கட் டியதால் மூன்று மாதத்தில் முழுவதுமாக சேதமடைந்து எவ்வித பயனுமின்றி காணப் படுகிறது. சேதமடைந்த தடுப்புச் சுவரை ஆய்வு செய்த போது, அரசின் விதிகளின்படி தர மான பொருட்களைக் கொண்டு கட்டாமல், பிளாஸ்டிக் பைகளில் மணலை நிரப்பி தடுப்பு சுவரின் உட்பகுதியில் வைத்து கட்டி யது தெரியவந்துள்ளது.  வத்திராயிருப்பு நொண்டி விருசு ஓடை யில் தடுப்புச் சுவர் கட்டியதில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, “இது தொடர்பாக ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

;