tamilnadu

மாநகராட்சி காலிப்பணியிடங்களை நிரப்ப ஊழியர்கள் கோரிக்கை

மதுரை:
கருணை பணி அடிப்படையில் பணியில் சேர்ந்துதற்பொழுது பொறுப்பு பணியாக துப்புரவு ஆய்வாளர், வரிவசூல், இளநிலை உதவியாளராக பணிபுரிபவர்களுக்கு அந்தந்த பணியிடங்களுக்கு உரிய பணிஆணை வழங்கி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.குடிநீர் பிரிவில் பலவருடங்களாக பிட்டர், பிட்டர் மஸ்தூராக பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்கு கல்வித்தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். தெருவிளக்கு மின்பிரிவில் பலவருடங்களாக காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளர், எலக்ட்ரிசியன், உதவியாளர் (ஹெல்பர்) காலிப் பணியிடங்களை கல்வித்தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.மதுரை மாநகராட்சி அத்தியாவசியப் பணிகளான குடிநீர், வடிகால், சுகாதாரம், தெருவிளக்கு போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்பொழுது காவலர் நியமனம் போன்று உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை மதுரையில் நடைபெற்றது. அ.தனசேகரன், சி.எம். மகுடீஸ்வரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, கே.கண்ணன், எஸ்.பழனிக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.மூர்த்தி, செயலாளர் க.நீதிராஜா, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கமாநிலப் பொருளாளர் இரா.தமிழ், கே.டி.துரைக் கண்ணன், கே.ராமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

;