மீன்பிடி துறைமுகம் 2 நாட்களுக்கு மூடல்
தூத்துக்குடி, ஜூன் 17- தூத்துக்குடியில் கொ ரோனா வைரஸ் தொற்று பர வல் காரணமாக பிரபல வணிக வளாகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் மூட ப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திற்கு வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்ப டுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறை முகம் 2 நாட்கள் மூடப்ப டும் என்று அறிவிக்கப்ப ட்டுள்ளது. மேலும், அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 240 விசைப்படகுகள் உள்ளன. ஏற்கனவே கொரோனா அச்சு றுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் 120 படகுகள் வீதம் தினமும் கடலுக்குச் சென்று வந்தன. இந்நிலையில், 2 நாட்கள் மீன்பிடி துறைமு கம் மூடப்படும் என அறி விக்கப்பட்டு உள்ளதால் விசைப்படகுகள் வெள்ளி யன்று கடலுக்குச் செல்ல வில்லை. வணிக வளாகம் மூடல் தூத்துக்குடி குரூப் பர்னாந்து சிலை அருகே உள்ள ஹாங்காங் பிளாசா வணிக வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வணிக வளா கத்தில் உள்ள கடையில் பணியாற்றிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ ர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வணிக வளா கத்தை மூடி, சுகாதாரப் பணிகளை மேற்கொண்ட னர். வணிக வளாகத்திற்கு தினமும் ஏராளனமான மக்கள் வந்து சென்றுள்ள னர். இதனால் பலருக்கு கொரோனா பரவியிருக்கும் என அஞ்சப்படுகிறது.