tamilnadu

img

மதுரை மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை:
தமிழகத்தில் புதனன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 110 பேரில் ஒன்பது பேர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூன்று பேர் பேரையூர் தாலுகாவையும், ஆறு பேர் மேலூர் தாலுகாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

பேரையூர் தாலுகா: பேரையூர் தாலுகாவில் 60 வயது ஆண், 49 வயது ஆண், 57 வயது ஆண் ஆகியோர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.மேலூர் தாலுகா: மேலூர் தாலுகாவில் 43 வயது ஆண், 40 வயது ஆண், 55 வயது ஆண், 48 வயது ஆண், 36 வயது ஆண், 52 வயது ஆண் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டத்தில் ஐந்துபேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் திருப்பத்தூரைச் சேர்ந்தவர்கள் மூன்றுபேர். தேவகோட்டை. இளையான்குடியில் தலா ஒருவர்.

;