தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாக லாபுரம் அருகே சாலையில் காணப்பட்ட அரிய வகை “நாணல் குச்சி பவளப்பாம்பு” பத்திரமாக வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகச் சிறிய அளவிலான, மெல்லிய உட லமைப்பு கொண்ட பாம்பு ஒன்று சாலை யை கடக்க முயன்றது. அப்போது வித்தி யாசமாக காணப்பட்ட இந்த அரிய வகை பாம்பை அப்பகுதியில் உள்ள விலங்குகள் நல இயற்கை ஆர்வலர்கள் பத்திரமாக பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்த பாம்பை இனம் காண உயிரின ஆய்வுக்கு உட்படுத்தியதில், இது இந்தியாவிலேயே மிக அரியவகை பாம்பான “நாணல் குச்சி பவளப்பாம்பு” என்றும், நல்ல பாம்பு கொண்டுள்ள அதே அளவு கொடூர விஷத்தன்மை கொண்டது என்றும் தெரிவித்தனர். பின்னர் பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.