சென்னை, பிப். 6- வரலாற்றை மாற்றி கல்வியை சீர்குலைக்கும் சங் பரிவார் கும்பலை ஒன்றுபட்டு முறியடிப் போம் என அனைத்திந்திய மாண வர் பெருமன்றத்தின் மாநில மாநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தௌ.சம்சீர் அகமது அறைகூவல் விடுத்தார். மாணவர் பெருமன்றத்தின் 16ஆவது மாநில மாநாடு சென் னையில் தோழர் மு.செல்லமுத்து நினைவரங்கில் திங்களன்று (பிப். 6) துவங்கியது. முன்னாள் மாநிலச் செயலாளர் மே.து.ராசுகுமார் சங்க கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழுத் தலைவர் எம்.எம்.மூர்த்தி வர வேற்றார். மாநிலத் தலைவர் மௌ.குணசேகர் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலாளர் விக்கி மகேசரி மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். “மாநில பட்டியலில் கல்வி” என்ற தலைப்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் துணைவேந்தர் எஸ்.ஜவகர் நேசன், மூத்த ஊடகவியலாளர் தி.செந்தில்வேலன் ஆகியோர் பேசினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தௌ. சம்சீர் அகமது மாநாட்டை வாழ்த்திப் பேசுகையில், “ஒன்றி யத்தில் பாஜக அரசு அமைந்த பிறகு தேசத்தின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது” என்றார்.
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது. தற்போது 50 விழுக்காடு தனியார் மருத்துவக் கல்லூரிகள் வந்துவிட்டன. அர சின் கொள்கைகளுக்கு எதிராக, மாணவர்களின் கல்வி உரிமை களுக்காக போராடினால் சிறை படுத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள் ளது என்றும் அவர் கூறினார். தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிபிசி வெளியிட்ட குறும்படத்தை வெளியிட்டதற்கு ஏபிவிபி அமைப்பின் குண்டர்கள் இடது சாரி மாணவர்களை தாக்கு கின்றனர். தாக்குபவர்களுக்கு தடி கொடுத்து உதவுகிறது அமித்ஷாவின் காவல் துறை என் றார். இந்த நிலை நாளை தமிழ் நாட்டிலும் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள் கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அந்நிய பல்கலைக் கழகங்களின் வரவால் ஏழை எளிய மாணவர்களின் கல்வி எப்படி பாதிக்கப்படும் என்பதை யும் இரண்டு அமைப்புகளும் இணைந்து மக்களிடம் கொண்டு செல்வோம். இடதுசாரி சிந்த னையுள்ள மாணவர்களை உரு வாக்குவோம், புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் அவர் கூறினார். அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செய லாளர் க.பாரதி, அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சே.எழிலன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் வேலை அறிக்கையை சமர்ப் பித்தார். முன்னதாக மாநில மாநாட்டையொட்டி ஞாயிறன்று (பிப். 5) பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாணவர் பெருமன்றத்தின் தேசிய தலைவர் சுவம் பானர்ஜி, தேசிய செயலாளர் விக்கி மகேசரி, சிபிஐ துணைப் பொதுச் செயலாளர் மு.வீர பாண்டியன் உள்ளிட்ட தலைவர் கள் பேசினர்.