tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கூரியர் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக கூரியர், பார்சல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. ‘சிந்தட்டிக்’ போதைப் பொருள் என்ற வேதி போதைப் பொருள் - மாத்திரையின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இவற்றின் விற்பனைக் களமாக சமூக ஊடகங்களும், அவற்றின் டார்க் நெட் சந்தையும் உள்ளன. அதன்மூலம் போதைப் பொருள்களை வாங்கி தனியார் கூரியர், பார்சல் சேவை மூலம் வீட்டில் இருந்தபடியே இளைஞர்கள் பெறுகின்றனர். இதைத் தடுப்பது சவாலான பணி என்பதால், கூரியர் - பார்சல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முதலில் வருவது மீனவர்கள்தான்

சென்னை: எப்போது மழை வந்தாலும் மக்களை காக்க முதலில் வருவது மீனவர்கள் தான். மக்களின் உயிரை  காப்பாற்றும் உங்களை கடவுளாக பார்க்கிறேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தேனீக்களால் நேர்ந்த சோகம்  

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் செந்தில்குமார் என்பவர் உயிரி ழந்தார். குலதெய்வத்தை வழிபட சென்றபோது நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர்.

தவெக டெபாசிட் வாங்காது

 சென்னை: மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தால் கேவலமா?  அவமானப்படுத்துவதா? அரசியல் ஞானம் இல்லாதவரை உடன் வைத்துக் கொண்டிருந்தால் கடவு ளால் கூட கட்சியை காப்பாற்ற முடியாது. இதே நிலை நீடித்தால் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்ட மன்ற பொதுத்தேர்தலில் தவெக டெபாசிட் கூட வாங்காது  என்று தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து  வீடியோ பதிவில் கட்சி நிர்வாகி ஒருவர் ஆதங்கத்துடன் கூறி யுள்ளார்.

மார்ச் 11 கனமழை எச்சரிக்கை

சென்னை: வருகிற 11 ஆம் தேதி தென் மாவட்டங் களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,  தூத்துக் குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்  என்றும் விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை,  நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை,இராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மன வருத்தம் இல்லையாம்!


சென்னை: மாநிலங்களவை சீட்டு ஒதுக்கும் விவகாரத் தில் அதிமுகவுக்கும் எங்களுக்கும் எந்த மன வருத்தமும் கிடையாது. தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு  இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால் கூட்டணி குறித்து  அப்போது முடிவு செய்யப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மறைமுக எச்சரிக்கை

சென்னை: “உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளி யில் பேசக் கூடாது. தனிப்பட்ட பிரச்சனைகளை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்  கூடாது. கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக தேர்தல்  பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று ஆலோ சனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கோயில்களுக்கு ஜிஎஸ்டி வரி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  அதிக வருவாய் வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள்  உள்ளன. கோவில்கள் மதம் தொடர்பானவை என்பதா லும், மக்களுக்கு சேவை செய்து வருவதாலும் ஜிஎஸ்டி வரி யில் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்து  சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரு வாய் வரக்கூடிய கோயில்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது.  

நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல்,  பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் நிபந்தனை களுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சோனாங் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது