காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்பு
சென்னை, மே 11- காவிரி டெல்டா விவசாயிகள், அரசியல் கட்சியினர் ஆகியோரின் தொடர் போராட்டத்தாலும் தமிழ் நாட்டில் இத்திட்டத்தை செயல்படுத் தக் கூடாது என்று சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி வலி யுறுத்தியதாலும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பட்டியலில் இருந்து தமி ழகத்தின் மூன்று பகுதிகளை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. இதற்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கங்களின் மாநிலப் பொதுச்செயலாளர்கள் சாமி.நட ராஜன், பி.எஸ்.மாசிலாமணி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடந்த மார்ச் மாதம் ஏலப்பட்டியல் வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டில் மூன்று பகுதிகள் இடம் பெற்றிருந்தது. 1. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை உள்ள டக்கிய வடசேரி நிலக்கரி பகுதி, 2. கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு நிலக்கரி பகுதி, 3. அரி யலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரிப் பகுதி, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே ஒன்றிய பாஜக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற் சித்தப் போது ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயிகள், பொதுமக் கள், அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து “காவிரி படுகைப் பாதுகாப்பு கூட்டியக்கம்” என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல கட்ட தொடர் போராட்டங் கள் நடத்தப்பட்டன. இந்த நிலை யில் தான் அப்போதைய அரசு சட்ட மன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு காவிரி படுகை மாவட் டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமன்றத்தில் சட்டத்தை நிறை வேற்றியது.
ஒன்றிய அரசு மீண்டும் இந்நிலப் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலப்பட்டியல் வெளியிட் டது. இதை கண்டித்து, தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட இடங்களை ஏலப்பட்டியலில் இருந்து முற்றி லும் நீக்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த 9.4.2023 அன்று தஞ்சையில் நடைபெற்ற “காவிரிப் படுகை பாது காப்பு கூட்டியக்கத்தின்” ஆலோ சனைக் கூட்டத்தில் ஒன்றிய அரசு ஏப் ரல் 30 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளை நீக்கவில்லையென்றால் மே மாதத்தில் காவிரிபடுகை பாது காப்பு கூட்டியக்கத்தின் சார்பில் அனைவரையும் ஒன்றிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 25.4.2023 அன்று ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் வெளி யிட்டுள்ள திருத்தப்பட்டியலில் தமிழ்நாட்டின் மூன்று பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளதை காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார் பில் வரவேற்கிறோம். மேலும், விவ சாயிகள் உணர்வுகளுக்கு மதிப்ப ளித்து தமிழ்நாடு அரசு சட்ட மன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறை வேற்றி, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என உறுதியான நிலை பாட்டை எடுத்த தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறோம். எதிர்காலத்திலும் ஒன்றிய அரசாங்கம் விவசா யத்தை பாழ்படுத்தக் கூடிய சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய எந்த திட்டத்தையும் பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல பகு தியில் அறிவிக்கக் கூடாது என வலி யுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.