தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும்
கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்
நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீர மைப்பு செய்யும் பணிகளை இன்னும் 25 ஆண்டு களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அநீதியான தொகுதி மறுசீரமைப்பிற்கு எதி ராக ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதற்கட்ட மாக சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதனடிப்படையில், ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் காலை 10.30 மணிக்கு, கூட்டு நடவடிக்கைக்குழுவின் முதல் ஆலோ சனைக் கூட்டத்தில், தமிழக முதல்வரின் அழை ப்பை ஏற்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜ யன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிஜூ ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் தலைவரும், ஒடிசா முன்னாள் முதலமைச்ச ருமான நவீன் பட்நாயக் காணொளி வழியாக கலந்து கொண்டார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரவு கடிதம் அனுப்பி யிருந்தார். கேரளத்திலிருந்துசிபிஐ மாநிலச் செயலா ளர் பினாய் விஸ்வம், காங்கிரஸ் மாநிலத் தலை வர் கும்பக்குடி சுதாகரன், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் கட்சியின் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், தெலுங்கானாவிலிருந்து பாரத் ராஷ்டிர சமிதி சார்பில், தெலுங்கானா முன்னாள் அமைச் சர் கே.டி. ராமராவ், வினோத் குமார், காங்கிரஸ் சார்பில் மகேஷ் கவுட், மஜ்லிஸ் கட்சியின் சார்பில் இம்தியாஸ் ஜலில், பஞ்சாப்பிலிருந்து சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், தல்ஜித் சிங் சீமா, ஒடிசாவிலி ருந்து பிஜூ ஜனதாதளத்தின் முன்னாள் எம்.பி. அமர் பட்நாயக், சஞ்சய் குமார் தாஸ் பர்மா, காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வருக்கு பாராட்டு கூட்டத்தின் துவக்கத்தில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் வர வேற்று, தொடக்க உரை ஆற்றினார்.
அதனை யடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பி னால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி னார். தொடர்ந்து பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்தை, ஆலோசனைகளைத் தெரிவித்தனர். பல்வேறு மாநிலங்களிடம் கலந்தாய்வு மேற்கொள்ளாமல் செய்யப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் வெளிப்படைத் தன்மை இல்லாமை, தெளிவு இன்மை ஆகியவை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். இந்தியாவில் வளர்ச்சியடைந்துள்ள மாநிலங்களின் அரசியல் - பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழுவை ஒருங்கிணைத்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர். தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதி களின் உரையாடல்களில் முன்வைத்த பல்வேறு கருத்துக்கள், வெளிப்படுத்திய அக்கறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், 7 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஹைதராபாத்தில் அடுத்தக் கூட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நட வடிக்கைக் குழுவின் அடுத்தக் கூட்டம் ஹைதரா பாத்தில் நடத்த வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விருப்பம் தெரிவித்த தன் அடிப்படையில், அடுத்தக் கூட்டம் ஹைதரா பாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜனநாயகத்தை மேம்படுத்துவதாக மறுசீரமைப்பு இருக்க வேண்டும்!
கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஜனநாயக முறையையும் பண்பையும் மேம்படுத்தும் நோக்கிலேயே ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அந்நடவடிக்கையை வெளிப்படை யாகவும், தொடர்புடைய அனைத்து மாநி லங்கள், மாநில அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து, உரையாடல் மேற்கொண்டு, அவர்கள் வழங் கும் கருத்துகளின் அடிப்படையில் மேற் கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையே தொடர வேண்டும் 42வது, 84வது, 87வது அரசியலமைப்புத் திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கை களைத் திறம்பட செயல்படுத்திய மாநிலங்க ளைப் பாதுகாப்பதும் / ஊக்குவிப்பதும், தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்தலும் ஆகும். இந்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படை யிலான நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீர மைப்புத் தள்ளிவைப்பு மேலும் 25 ஆண்டு களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத் தைத் திறம்பட செயல்படுத்தி, அதன் விளை வாக மக்கள்தொகை விகிதம் குறைந்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.
இதற் காக ஒன்றிய அரசு தேவையான அரசியல மைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும். பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மாநிலங்க ளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கி ணைப்புக் குழு, மேலே குறிப்பிடப்பட்ட கொள் கைகளுக்கு முரணாக ஒன்றிய அரசு மேற் கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு நடவ டிக்கையின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும். அந்தந்த சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கி ணைப்புக் குழு, நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, மேற்குறிப்பிட்ட அம் சங்களின் அடிப்படையில் இந்தியப் பிரதம ருக்குத் தங்களது கருத்தைத் தெரிவிக்கும்.
கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சனையில் அந்தந்த மாநி லங்களில் சட்டமன்றத் தீர்மானங்களை நிறை வேற்றி, அதனை ஒன்றிய அரசுக்குத் தெரி விப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் ளும். ஒருங்கிணைந்த பொதுகருத்தை உரு வாக்க, கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நட வடிக்கைகளின் வரலாறும், அந்நடவடிக்கை களின் விளைவுகளும் குறித்த தகவல்களை அந்தந்த மாநில பொதுமக்களிடையே பரப்பு வதற்கு கூட்டு நடவடிக்கைக் குழு தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.