tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

அமித் ஷாவை கண்டித்து  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஏப்.11 - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.  தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசியது, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வருவது உள்ளிட்ட பல்வேறு  செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை மயிலாப்பூரில் டாக்டர் அம்பேத்கர் பாலத்தில் (சிட்டி சென்டர் அருகில்) நடந்த ஆர்ப்பாட்டத்தில் ‘உள்துறை அமைச்சர் அமித் ஷாவே திரும்பி போ’ என முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் கருப்பு புறாவை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ், அசன் மவுலானா எம்எல்ஏ, கோபண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒலி சோதனை மையம் இன்று தொடக்கம்

சென்னை, ஏப்.11- சென்னையில் உள்ள தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.ஓ.டி) ஒலி சோதனை மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை  (ஏப்,12) தொடங்கி வைக்கிறார். பின்னர் நேரடி செயல் விளக்கத்தையும் அவர் ஆய்வு செய்வார். என். ஐ. ஓ. டி, ஐ. எம். டி சென்னை, என். சி. சி. ஆர். எஸ்.  இ.ஆர். சி, சி. எல். ஆர். ஐ மற்றும் சி. எம். சி உள்ளிட்ட புவி அறிவி யல் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்ச கத்தின் பல்வேறு நிறு வனங்களின் பங்கேற்பைக் கொண்ட சிந்தனை அமர்வில் அமைச்சர் உரை யாற்றுகிறார்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயிக்கு இழப்பீட்டுடன் அரசு வேலை வழங்குக

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவ சாயிக்கு அரசின் உயர்ந்தபட்ச இழப்பீட்டு டன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வழங்க வேண்டும் என விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டையில் மாதாந்திர விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளி யன்று (ஏப். 11) வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் வியாழனன்று (ஏப். 10) பலத்த காற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.  இந்நிலையில் வாலாஜா வட்டம் தெங்கால் கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி சேகர் நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து சிப்காட் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த விவசாயிக்கு அரசின் அதிகபட்ச இழப்பீட்டுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி கோட்டாட்சியரிடம் மனு அளித்து வலி யுறுத்தினார். உடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, விவசாயிகள் சங்க. மாவட்டப் பொருளாளர் சி.ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் குமார், சேகர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.