tamilnadu

img

சிலம்பப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிலம்பப் போட்டிகளில்  வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை, ஜூன் 8 - புதுக்கோட்டை பாண்டியன் மார்ஷயல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவி லான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று  மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாண்டியன் மார்ஷயல் ஆர்ட்ஸ் தலைவர் எம்.ஏ.ரகுமான் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் மரபுக் கிளைத்  தலைவர் எஸ்.பாண்டியன், பாண்டியன் மார்ஷயர் ஆர்ட்ஸ் அகாடமி துணைச் செய லாளர் எஸ்.இளஞ்சூரியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்வில் மாவட்ட அளவிலான சிலம்பப்  போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அள விலான போட்டிக்கு தேர்வான மாணவ, மாணவிகளுக்கும், 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,  மாணவிகளுக்கும் நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக மாஸ்டர் கார்த்திக் வர வேற்க, சங்கத்தின் பொருளாளர் சோபிகா நன்றியுரை கூறினார்.