tamilnadu

சட்டத்தின் ஆட்சி நடைபெறும்: டேனியல் ஓர்டேகா உறுதி

மனாகுவா, ஜன.12- நிகரகுவாவின் புதிய ஜனாதிபதி யாகப் பொறுப்பேற்றுக் கொண்ட இடதுசாரித் தலைவர் டேனியல் ஓர்டேகா, நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் என்ற உறுதிமொழியை அளித்துள்ளார். ஐந்தாவது முறையாக நிகரகுவா வின் ஜனாதிபதியாக ஓர்டேகா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். நான்காவது முறையாகத் தொடர்ந்து ஜனாதிபதியாக பணியாற்றப் போகும் ஓர்டேகாவும், அவருடன் இணைந்து தேர்தலை சந்தித்த ரொசாரியோ முரில்லோ துணை ஜனாதிபதியாகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். 2027 ஆம் ஆண்டு வரையில் அவர்கள் பொறுப்பு வகிப்பார்கள். இருவருக் கும் நிகரகுவாவின் தேசிய தேர்தல் கவுன்சில் தலைவர் பிரண்டா ரோசா சான்றிதழ்களை வழங்கினார். பதவியேற்பு நிகழ்வில் கியூபா வின் ஜனாதிபதி மிகுல் டியாஸ் கானெல், வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, சீன தேசிய காங்கி ரஸ் நிலைக்குழுவின் துணைத்தலை வர் காவோ ஜியான்மிங், ஹோண்டுர சின் ஜனாதிபதி ஜூவான் ஓர்லாண்டோ உள்ளிட்டவர்களோடு 22 நாடுகளின் அதிகாரப்பூர்வக் குழுக்களும் பங் கேற்றனர்.

குவாதிமாலா, எல்சால் வடார், ஈக்குவடார் ஆகிய நாடுக ளின் முன்னாள் ஜனாதிபதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கள். மத்திய அமெரிக்காவில் இடதுசாரி அரசுகள் அமைந்து வருவது அமெ ரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தினா லும், தற்போதைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நாடுகள் மக்கள் மீது சுமையை ஏற்று கையில், மீண்டும் இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத் தும் கட்சிகள் மற்றும் தலைவர்களை மக்கள் தேர்வு செய்து வருகிறார்கள். சீனாவுடனான உறவில் ஓர்டேகா குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். ஒரே சீனம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ள அவர், தைவானின் தூதரகத்தை இழுத்து மூட உத்தரவிட்டார். அதோடு நிற்கவில்லை. தூதரகக் கட்டிடத்தை தைவான் விற்க முயற்சித்தபோது அது சீனாவிற்குச் சொந்தமானது என்ற உத்தரவையும் அவரது அரசு பிறப்பித்தது. சீனாவுடனான வர்த்தக உறவு அமெரிக்காவின் தடைகளை உடைக்க உதவியுள்ளது என்று நிகர குவாவின் வர்த்தகத்துறை குறிப்பிட் டுள்ளது.