சென்னை, ஜன. 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் உள்பட 12 பேர் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது. தமிழக சட்டப்பேரவை வியாழனன்று காலை 10 மணிக்கு கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான சேப்பாக்கம் ஜீனத் சர்புதீன், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் முன்னாள் உறுப்பினர் ஆ.ராஜேந்திரன், சிவகங்கை கரு.முருகானந்தம், பேரணாம்பட்டு வெ.கோவிந்தன், லால்குடி ஜெ. லோகம்பாள், பூங்காநகர் எஸ். ஜி.விநா யகமூர்த்தி, செஞ்சி வே.கண்ணன், திருவாடனை பெரி.சண்முகம், ஆலந்தூர் எஸ். அண்ணாமலை, நாகர்கோவில் எம். மோசஸ், மாயவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மதுரை கிழக்குத் தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவ ருமான தோழர் என். நன்மாறன் மறைவுக் கும் தமிழக சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு மணித்துளிகள் அஞ்சலி செலுத்தினர்.
ரோசய்யா
தமிழக முன்னாள் ஆளுநர் கோ. ரோசய்யா, முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, குழு கேப்டன் வருண் சிங் மற்றும் 11 ராணுவ உயர் அலுவ லர்கள் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
துரைமாணிக்கம்
நெற் களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவரும், காவிரி உரிமைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே. துரை மாணிக்கம் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக் கப்பட்டது.
புனீத் ராஜ்குமார்
பிரபல கன்னட திரைப்பட நடிகரும், ஏழை-எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பெரும் உதவி செய்து வந்தவரும், ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட ராஜ்குமாரின் மகனுமான புனீத் ராஜ்குமார் மறைவுக்கும், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய மனித உரிமை செயற் பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பேரவையின் மாற்றுத் தலைவர்கள்
க. அன்பழகன், ப.ராமகிருஷ்ணன், எஸ். ஆர்.ராஜா, க. உதயசூரியன், துரை. சந்திரசேகரன், டி.ஆர்.பி. ராஜா ஆகிய ஆறு உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேர வையின் மூன்றாவது கூட்டத் தொடருக்கான மாற்றுத் தலைவர்களாக செயல்படுவார்கள் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.