சென்னை, அக்.18- ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தீர்மானம் கொண்டு வந்தார். அதனை ஆதரித்தும் வரவேற்றும் சட்ட மன்ற கட்சித் தலைவர்கள் பேசினர். அதன் விவரம் வருமாறு:-
வி.பி.நாகை மாலி (சிபிஎம்):
இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப் புக்கு வகை செய்யும் முறையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் கல்வி நிறுவ னங்கள் அனைத்திலும் இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும் என்றும் ஆங்கிலம் விருப்ப மொழியாக மட்டுமே இருக்கும் என்றும் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநில மாணவர்களை ஒன்றிய கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியே தள்ளும் முயற்சியாகவே இது உள்ளது. ஒன்றிய அரசின் இதுபோன்ற நடவடிக் கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ்மொழி உள்ளிட்ட 22 இந்திய மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் தேர் ்வாணையத்தின் கேள்வித் தாள்களில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டும். இந்த நிலையில், அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்ற குழுத் தலை வரால் கடந்த 9.9.2022 அன்று குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்ட அறிக்கையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசும் மக்களின் நலன்களுக்கு எதிராக வழங்கப்பட் டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தக்கூடாது என்றார் நாகை மாலி.
அதிமுகவும் ஆதரவு
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக):
8வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை. தமிழ், ஆங்கிலம் என்கிற இருமொழி கொள்கையைத் தொடர்ந்து கடைப் பிடிப்போம். எனவே, எந்த காலத்தில் நமது அன்னைத் தமிழை மீறி இந்தி திணிப்பைக் கொண்டுவர ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் தீர்மா னத்தை ஏகமானதாக முழுமனதோடு ஆதரிக்கிறோம்.
கு.செல்வபெருந்தகை (காங்.):
முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் திகழ்ந்துகொண்டிருக் கும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி மொழி திணிப்பை எதிர்ப்பதற்கு இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தி யாகத் தமிழ்நாடு களத்தில் நிற்கிறது.
டி.ராமச்சந்திரன்(சிபிஐ):
சங் பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டி ருக்கும் ஒன்றிய பாஜக அரசு, தமிழ் மொழி என்கிற தேன்கூடு மீது கல்லை எறிந்திருக்கிறது. அதன் விளைவுகளை மிக விரைவில் சந்திக்கும்.
ஜவாஹிருல்லா(மமக):
மொழி திணிப்பு என்பது எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்காது. ஒரு மாநிலமோ அல்லது நாடு வளரவேண்டும் என்றால் ஆங்கிலமும் அந்த அந்த பிராந்திய மொழிகளும்தான் அவசியம். எனவே, முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானம் இந்தி பேசாத மாநில ங்களிலும் இந்தி மொழி சர்வாதிகாரம் ஒழியும்.
படிப்பதும்-இடிப்பதும்!
“தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படும் என்றால் பாஜக அதை வன்மையாகக் கண்டிக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் தேவை யில்லை. பிரதமர் மோடி ஐநாவுக்குச் சென்றாலும் அயோத்திக்குச் சென்றா லும் திருக்குறளையும் பேசுவார். தமிழ் வளர்த்த புலவர்கள் குறித்தும் பேசுவார் என்றும் முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தில் ‘சி’பிரிவு மாநிலங்களில் (இந்தி பேசாத மாநிலங்களில் திணிக்கப்படுகிறது) என்று கூறியிருக்கிறார். ஆனால், 9.9.2022 அன்று கொடுத்திருக்கும் பரிந்துரையில் சி பிரிவு மாநிலங்களில் தாய் மொழி கட்டாயம் இருக்க வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மொழிக்கும் தாய் மொழிக ளுக்கும் பாதிப்பு இருக்காது என்பதால் முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை ஏற்க இயலாது” என்று கூறிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்தார். அப்போது குறுக்கிட்ட தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு,“படிப்பது ராமாயணமாம், இடிப்பது ராமர் கோயிலாம்”என்றவுடன் பேரவை யில் சிரிப்பொலி எழுந்தது. அவை முன்னவர் துரைமுருகன், வேல்முருகன்(தமிழர் வாழ்வுரிமை கட்சி), ஈஸ்வரன் (கொங்கு நாடு தேசிய கட்சி), சதன் திருமலை குமார் (மதிமுக), ஜி.கே.மணி (பாமக) ஆகியோரும் அரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.
'