tamilnadu

img

அம்மாசத்திரம் தோழர் வாசுதேவன் மணி விழா

கும்பகோணம், மே 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில நிர்வாகியுமான அம்மாசத்திரம் வாசுதேவன் அறுபதாவது பிறந்த நாள் மற்றும் மணி விழா கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகிதலைமை ஏற்றார். நிகழ்ச்சியில் வாசுதேவன் ஜெயந்தி தம்பதியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து குழந்தைகள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தொடர்ச்சியாக நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற தலைப்பில் இல்லத்தரசிகளும் குடும்ப தலைவர்களும் விவாதம் நடைபெற்றது. நிறைவாக குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு விழா குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது.விழாவில் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில், தோழர் வாசுதேவன் பிறந்தநாள், மணி விழா வழக்கம்போல் இல்லாமல் தம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் பிறருக்கு உதவும் மனப்பக்குவத்தை உறுதி செய்யும் நிகழ்வாகஅமைந்திருக்கிறது. இதில் தோழர் வாசுதேவன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி என்கின்ற சீதாலட்சுமி ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்து வருகிறார்கள் என்று வாழ்த்தி பேசினார். நிகழ்வில் தஞ்சை மாவட்ட செயலாளர் ஜிநீலமேகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் சின்னை.பாண்டியன் சிஜெயபால் என்.வி,கண்ணன் மாதர் சங்கமாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜீவபாரதி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் பழ.அன்புமணி மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி குடந்தை நகர செயலாளர் செந்தில்குமார் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரிசாமி நாகேந்திரன் சேகர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் சிபிஎம் தோழர்கள் கலந்து கொண்டுவாசுதேவன் ஜெயந்தி ஆகியோரை பாராட்டி வாழ்த்தினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஜய் அரவிந்த். ராதிகா,ஹரிணி விதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.