tamilnadu

img

தோழர் வெ.சுந்தரம் நினைவேந்தல் நிகழ்ச்சி

மதுரை, மே 12-அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் தோழர் வெ.சுந்தரம் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் புறநகர் மாவட்டச் செயலாளரும், தீக்கதிர் நிர்வாக ஆலோசகரும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகியுமாக இருந்து செயல் பட்டு மறைந்த தோழர் வெ.சுந்தரம் அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று அண்ணா பேருந்துநிலையம் எதிரில் உள்ள காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சுனில்மைத்ரா அரங்கில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மதுரைக் கோட்டத் தலைவர் ஜி.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் நிர்வாகி எல்.ராமசாமி தோழர் வெ.சுந்தரம் உருவப் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார், தென்மண்டல காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், மூத்த தோழர் இ.எம்.ஜோசப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலக்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கதலைவர் ராஜமணிக்கம், தீக்கதிர்பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கபொதுச் செயலாளர் செல்வின் சத்தியராஜ், மூட்டா மாவட்டச் செயலாளர் ஏ.டி.செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்திப் பேசினர்.

;