புதுக்கோட்டை, ஏப். 25 - இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் ஆர்.உமாநாத் நூற்றாண்டு விழா, ஏப்ரல் 25 செவ்வாயன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர் மன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தோழர் உமாநாத் நூற்றாண்டு சிறப்பு மலரை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா பெற்றுக் கொண்டார். இம்மலரை கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு தயாரித்துள்ளது. விழாவில் மத்தியக்குழு உறுப்பி னர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப் பினர்கள் எஸ்.ஸ்ரீதர், ஐ.வி.நாக ராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ., சாமி.நடராஜன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் உரைநிகழ்த்தினர். கட்சியின் திருச்சி மாநகர்-புறநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட தலைவர்கள் மற்றும் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.