கிருஷ்ணகிரி, டிச.5- சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் அண்ணாஜியின் துணைவியார் தோழர் நாக ரத்தினம் அண்ணாஜி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக அக்டோ பர் 29 ஆம் தேதி காலமா னார். அவரது படத் திறப்பு நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் திங்களன்று நடைபெற்றது. கட்சியின் பொறுப்பு மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் தலைமை தாங்கினார். மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு தோழர் நாகரத்தினம் அண்ணாஜி யின் படத்தை திறந்து வைத் தார். இந்த நிகழ்வில் தோழர் நாகரத்தினம் அண்ணாஜி யின் பேரன் மருத்துவர் ஜெய் மற்றும் குடும்பத்தினர் பங் கேற்றனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லி பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இரு தயராஜ், சாம்ராஜ், கோவிந்த சாமி, மகாலிங்கம், சி.பி.ஜெய ராமன், பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சல மேரி, சுரேஷ், வட்ட, ஒன்றியச் செயலாளர்கள் வெங்கடேஷ், ராஜா, ராஜா ரெட்டி, முனியப்பா, சபாபதி, சாமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாச்சாத்தி போராட்டம் உட்பட மாதர், விவசாயிகள் சங்கம் மற்றும் கட்சி பொறுப்பு களிலிருந்தும் போராட்டங்க ளில் முன்னின்றதுடன் அண்ணாஜி மருத்துவமனை யை கட்சிக்கு தானமாகவும் வழங்கியவர் தோழர் நாக ரத்தினம் என்றும் கே.பால கிருஷ்ணன் புகழாரம் சூட்டி னார். பேட்டி முன்னதாக கிருஷ்ணகிரி யில் செய்தியாளர்களை சந் தித்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறியதாவது:- சமூகத்தில் திருநங்கை கள் புறக்கணிக்கப்படுவது அவமானம், கேலி கிண்ட லுக்கு ஆளாகும் நிலை இன் னமும் தொடர்கிறது. இது போன்று அடித்தட்டு நிலை யிலுள்ள மக்களுக்கு முதல் வர் ஆக்கப்பூர்வமான நட வடிக்கை மேற்கொள்ள வேண் டும். திருநங்கைகளாக இருப்பவர்களில் பலரும் படித்த பட்டதாரிகள் உள்ள னர். அவர்களுக்கு தனியார் நிறுவனங்களும் வேலை வழங்குவதில்லை. இவர்கள் வாடகைக்கு குடியிருக்கக் கூட வீடு வழங்க பலர் மறுக் கின்றனர். எனவே அரசு ஒரு குறிப்பிட்ட இட ஒதுக்கீடு வழங்கி வேலை வாய்ப்பு வழங்கவும், வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலையில்லாத் திண் டாட்டம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. அரசு துறைகளிலும் சரி, தனியார் நிறுவனங்களிலும் சரி நிரந் தர வேலைக்கு ஆள் எடுப்ப தில்லை. ஒப்பந்த அடிப்ப டையிலேயே பணிக்கு எடுக் கின்றனர். இல்லையென் றால் அனைத்து பணிகளும் அவுட்சோர்சிங் விடப்படு கிறது. இதனால் இளைஞர் களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. எனவே தமிழக அரசு அவுட்சோர்சிங் முறையையும், ஒப்பந்த அடிப்படையில் பணிய மர்த்துவதையும் கைவிட வேண்டும். தமிழக, ஒன்றிய அரசு கள் அறிவித்துள்ள காவேரி தெற்கு மண்டல வன விலங்கு சரணாலயம் வன விலங்குகளை மட்டும் பாது காப்பதாக இருந்துவிடக் கூடாது. அஞ்செட்டி, தேன் கனிக்கோட்டை வட்டங்க ளில் வறிய நிலையில் உள்ள 195 கிராம மக்களையும், வாழ் வாதாரத்தையும், விவசா யத்தையும் பாதுகாப்ப தாக இருக்க வேண்டும். இப்போது அறிவிக்கப்பட் டுள்ள இந்த சரணாலயத் தால் 195 கிராம மக்களின் வாழ் நிலை முற்றிலும் பாதிக்கப் படுவதாக உள்ளது. எனவே தற்போது அறிவித்துள்ள இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தள்ளி மக்கள் பாதிக் காத வகையில் சரணாலயம் அமைக்க வேண்டும். வட மாநில தொழிலாளர் கள் கூட்டம் கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத் திற்கு வருகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசு எந்த புதிய வேலை வாய்ப்பு களையும் உருவாக்க வில்லை. இருக்கும் நிரந்தர வேலைகளையும் ஒழித்துக் கட்டி வருகிறார்கள். தமிழ கத்தில் உள்ள வேலை வாய்ப்புகளில் இங்குள்ள தொழிலாளர்களுக்கு முன் னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.