மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பெண் உரிமை போராளியுமான மறைந்த தோழர் மைதிலி சிவராமனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோவை காந்திபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று தோழர் மைதிலி சிவராமனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.