tamilnadu

தோழர் எம்.பாண்டி காலமானார்

மதுரை, மே 11- மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க(சிஐடியு)த்தின் மாவட்டப் பொருளாளரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரும்பாலைக் கிளைச் செயலாளருமான தோழர் எம்.பாண்டி (58) புதனன்று காலமானார். மாரடைப்பு காரணமாக கடந்த திங்களன்று கே.கே.நகர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதனன்று பிற்பகல் காலமானார். தோழர் பாண்டியின் மறைவை அறிந்து கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் மா.கணே சன், மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், மாவட்ட நிர்வாகி சுப்பையா, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், புதூர் அண்ணா நகர் பகுதிக்குழு செயலாளர் குமரவேல் மற்றும் மாநகராட்சி சங்கத் தலை வர் விஜயன்,பொதுச்செயலாளர் ம.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம்,மூத்த தோழர் கருப்பன் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நூற்றுக்கணக்கான தொழிலாளிகளும், தொமுச, விசிக தொழிற்சங்கத் தலைவர்களும், மாநகராட்சி சிஐடியு சங்க நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் பாண்டிக்கு ஆறு பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி அண்மையில் தான் மாரடைப்பால் காலமானார். பட்டியலின மக்கள் நிறைந்து வாழும் கரும்பாலை பகுதியில் மூத்த தோழர் கருப்பனுக்கு அடுத்து அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்ற தலைவராக இருந்தார். மதுரை மாநகராட்சியில் 100 வார்டு தொழி லாளிகள் மட்டுமின்றி மேல்நிலை முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை நன்கறிந்த மதிப்புமிக்க தலைவராகவும் திகழ்ந்தார்.தினசரி மாநகராட்சி தொழிலாளிகள் அலுவல் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பாண்டியை நாடி வருவதுண்டு. தொழிலாளி களிடம் மட்டுமின்றி அனைவரிடமும் அன்போடு பழகுவது அவருடைய தனிக் குணமாகும். தோழர் பாண்டியின் மறைவு கட்சி மற்றும் தொழிற்சங்கத் தோழர்கள், தொழிலாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.