tamilnadu

மேற்குவங்க ஆளுநரை நீக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

கொல்கத்தா,பிப்.18- மேற்குவங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கரை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜக்தீப் தங் கருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரு கிறது. இந்நிலையில்  மேற்குவங்க ஆளுநர் பதவியில் இருந்து ஜக்தீப் தங்கரை நீக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறி ஞர்  ராம பிரசாத் சர்கார் என்பவர் கொல்கத்தா  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த ரிட்  மனுவில், ஆளுநர்  ஜக்தீப் தங்கர் மாநில  அரசின் செயல்பாடுகளில் தலையிடுவ தாகவும், அவர் பாஜகவின் குரலாக பேசி  வருவதாகவும்  இதனால், ஜக்தீப் தங்கரை மேற்குவங்க ஆளுநர்  பதவியில் இருந்து நீக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை வெள்ளியன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மேற்குவங்க ஆளுநர்  ஜக்தீப் தங்கரை நீக்கக்கோரி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.