ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும், சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை 177இன் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்ச்சி பெற்றோர் நலக் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திங்களன்று (அக். 3) உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.