டோக்கியோ, பிப்.8- போலியோ ஒழிப்பிற்கான முயற்சி யில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான யுனிசெப்பின் முயற்சிக ளுக்கு ஜப்பானின் ஆதரவு இருக்கும் என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரான கோய்கே அகிரா உறுதியளித்துள்ளார். உலகம் முழுவதுமான போலியோ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான நிதி யுதவியை ஒருங்கிணைக்கும் பணியை உலக போலியோ ஒழிப்பு முன்முயற்சி என்ற அமைப்பு மேற்கொண்டு வரு கிறது. இந்த அமைப்பின் மூத்த ஆலோ சகராக யுனிசெப் அமைப்பின் யமா குச்சி இகுகோ பணியாற்றுகிறார். இவ ருடன் உலகம் முழுவதுமான பணி களை ஒருங்கிணைப்பது பற்றி கோய்கே அகிரா ஆலோசனை நடத்தி யுள்ளார். ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் அனைத்துக் கட்சி களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அமைப்பு ஒன்று உரு வாக்கப்பட்டுள்ளது.
உலக அளவிலான போலியோ ஒழிப்புக்கான நடவடிக்கை களை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. இந்த அமைப்பின் துணைத் தலைவராக கோய்கே அகிரா பணி யாற்றிக் கொண்டிருக்கிறார். பிற கட்சி கள் மற்றும் அவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உலகப் போலியோ ஒழிப்பில் இணைக்கும் முயற்சியில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியப் பங்காற்றி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் கோய்கே வுடனான உரையாடலில், “ஆப்கா னிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வெறும் ஐந்து போலியோ வைரஸ் பாதிப்புகள்தான் 2021 ஆம் ஆண்டில் இருந்தது. சின்னம்மையை ஒழித்ததுபோன்று, போலியோவையும் முழுமையாக ஒழித்துவிட முடியும். இதை சாதிப்பதற்கு, ஜப்பான் அரசின் உதவி மிகவும் முக்கியமானது” என்று யமாகுச்சி தெரிவித்துள்ளார். உலக போலியோ ஒழிப்பு முன்முயற்சி என்று அமைப்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு உரு வாக்கப்பட்டதாகும். பல நாடுகளின் அரசுகள் மற்றும் ஆறு அமைப்புகள் இணைந்து இந்த அமைப்பை ஏற்படுத்தின. இந்த ஆறு அமைப்புக ளில் யுனிசெப் மற்றும் உலக சுகாதா ரக் கழகமும் இடம் பெற்றுள்ளன. போலியோ ஒழிப்பில் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை 2022 ஆம் ஆண்டி லிருந்து துவக்கியிருக்கிறார்கள். ஜப்பானின் பங்களிப்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.