சென்னை, மார்ச் 1 - மக்களவைத் தேர்தலில் மதிமுக-வுக்கு பம்பரம் சின் னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி அக்கட்சியின் பொ துச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் புதனன்று மனுத் தாக்கல்செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதிமுக கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் பரி சீலிக்க உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையையும் மார்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. நடைபெற உள்ள 2024- மக்களவைத் தேர்தலில் மதிமுக-வுக்கு ‘பம்பரம்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தலைமைத் தேர்தல் ஆணைய ருக்கு 2023 டிசம்பர் 12 அன்று கோரிக்கை மனுஅளித்திருந்தார். மீண்டும் 2024 பிப்ர வரி 5 அன்று நினைவூட்டுக் கடிதமும் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.